குழந்தை ஓவியம்



மலைமுகடுகளுக்கிடையே
சூரியன் ஒளிந்திருப்பதாய்
வானம் குறுகி நிலப்பரப்பில்
பொதிந்திருப்பதாய்
தமிழின் எழுத்தொன்று
தலைகீழாய் அந்தரத்தில் தொங்குவதாய்
திரிந்த கயிற்றின் முனை
கீற்றுகளாய் படிந்திருப்பதாய்
அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது
நல்லாயிருக்கா டாடி என்று
நீட்டுகிறாள்
வெரிகுட் என்று சொல்லியபடி
புன்னகைக்கிறார் கண்ணில்லாத அப்பா.

--------------------------------------

அவள் வரைந்த காகிதத்தின் வழியே
லாஸ்காக்ஸின்
கொம்புடைந்த காட்டெருமையொன்று
திறக்காத கதவின் வழியே
மூர்க்கமாக முட்டி வெளியேறுகிறது
ஒன்றன்பின் ஒன்றாய்
வீடுமுழுக்க
புற்களினிடையே பூண்டுகள்
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
தரைமுழுக்க
நிறங்களின் சாம்ராஜ்யம்
கொடிகட்டிப் பறக்கிறது
என் தலைக்கு மேலே
ஒரு விண்மீன்
ஊர்ந்து செல்லுகிறது
இன்னும் என்னென்ன
உருப்பெற காத்திருக்கின்றனவோ
அதென்னவோ தெரியவில்லை
நான் வரையும் பொழுது
எதுவுமே உருப்பெற்று
வெளியேறியதில்லை!

Comments

இரண்டும் கவிதையும் ஒரே ஓவியத்தை வைத்து இரண்டு களத்தை தேர்ந்தெடுத்து அதை தொகுத்த விதம் அருமை..

ரசித்தேன் முழுமையாய்
மனம் கவர்ந்த ஓவியம்!
மிக இயல்பானதென எடுத்துக்கள்ல இயலவில்லை.... கடைசி வரி மிக வலிமை.... பாராட்டுக்கள்.
ரசித்தேன் பாராட்டுக்கள்
குழந்தை ஓவியம்

அப்பா அப்பப்பா ...

------------------

உறுபெற்றவை வெளியேறவில்லை

இரண்டாவது ஓவியம் ‍ ஒன்னும் சொல்வதற்கில்லை
sakthi said…
ஆதவா அருமை அதுவும் இரண்டாவது கவிதை சூப்பர்ப்!!!
sakthi said…
This comment has been removed by the author.
sakthi said…
நான் வரையும் பொழுது
எதுவுமே உருப்பெற்று
வெளியேறியதில்லை!

அதே அதே நான் வரையும் எதுவும் உருப்பெற்று வெளியேறியதில்லை எனும் வழி என்னிடமும்!!!!
ஆதவா!! அருமை! வரிகளை மீண்டும் படிக்கத்தூண்டுகிறது.
ஓவியரே, கவிஞராய் மாறுவதில் மொழியின் அழகு கூடுகிறது..தொடருங்கள்
ஹேமா said…
குழந்தை ஓவியம் திரும்பவும் தூசு தட்டி ஒளிரத்தொடங்கிவிட்டது.
அதுவே சந்தோஷம்.
முதக் கவிதை மனதை அழுத்தியது ஆதவா.
அப்பாடி.... திரும்பவும் வந்துட்டீங்களா! சந்தோஷமாயிருக்கு.
கவிதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.
ஆதவா said…
அனைவரின் அன்புக்கும் நன்றி!! (நேரமில்லை, தனித்தனியே சொல்ல)

அன்புடன்
ஆதவா.
வாங்க ஆதவா.... நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் தளத்தில் கவிதை... வாழ்த்துகள். அடிக்கடி வாங்க...
முன்பே அறிந்திருந்தீர்களோ. இப்படி சிறப்பாக குழந்தை ஓவியங்கள் தீட்டப்போகிறொமென்று. வலைப்பூவின் பெயரிலேயே அமைந்த கவிதைகள் நன்று