வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு கடிதம் வந்தது
சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மாயையை
அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்
இன்னும் கிழித்துப் படிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்
எதன் அடையாளமாகவேனும்
தெரிந்து கொள்ளும் ஆவலில்
கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது

வெகுநாட்களுக்குப் பிறகு காணாமல் போனவன் என்ற அடைப் பெயரோடு வீடு திரும்பியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக வித்தியாசமில்லாத உணர்வுகளோடு பதிவுகளை எழுத ஆரம்பிக்கையில் மறந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கும் மொழியிச்சை தானாகவே வந்தமர்ந்து கொள்கிறது. ஒருவகையில் எச்சிலெனத் துப்பித்தான் காணாமல் போவதற்கான ஆயத்தங்களை முதலில் மேற்கொண்டிருந்தேன். (விலாவாரியாகச் சொல்லவேண்டுமல்லவா.... வரலாறு மிக முக்கியம்..!!)
பொன்னாத்தாவின் சவலை பாய்ஞ்சிடுச்சு சிறுகதையைப் போன்றே, எழுத்துக்குப் பின்னைய என்னுலகம் குறித்த சிந்தனைகள் இப்பொழுதே (ஒன்றும் சாதித்துவிடாமலேயே) தோன்ற ஆரம்பித்துவிட்டன. தேவையற்ற எண்ணங்கள், மனக்குழப்பத்தின் மையத்தில் நொரண்டிக் கொண்டிருந்தன. எழுத்து, மழை வடிந்தபிறகு காய்ந்திருக்கும் ஈரமண்ணாக மனதின் துளைகளில் நிரம்பியே கிடக்கிறது. வெளிப்பாட்டு வாழ்வு, தோண்டியெடுத்து விடக்கூடாத எச்சரிக்கை உணர்வில் வழிந்து கிடக்கிறது... இதில் நான் எதைவிடுத்து எதைச் செய்ய? பரவலாக நண்பர்களின் அழைப்பு, நெகிழ்ச்சியான நொடிகளை குமிழ்களென உருவாகி, அழைப்பு முடிந்த பிறகு உடைந்து தெறித்தது. பொதுவாகவே நான் யாரிடமும் சொல்லிக் கொண்ட தற்காலிக சமாதானம், வேலைப்பளு என்பதாக இருந்தது. ஆனால் வேலைப்பளு மட்டுமே காரணமல்ல என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். மிக அதிக வித்தியாசமில்லாமல், கடைகள் (Blogs) திறந்து கிடக்கின்றன. புதிய பொருட்கள் பார்வைக்கு பதியப்பட்டிருக்கின்றன. அவரவர் மனக்கோப்பையில் தவறி விழுந்த எழுத்துக் கனங்களை அவரவர் பருகிக் கொண்டிருக்கின்றனர். மிகக்குறுகிய காலத்தில் நான் சேகரித்துக் கொண்ட நட்புகள் குறுகிய தவிர்ப்பை நிராகரிக்கின்றனர் எனும்பொழுது என்மீதான, எழுத்தின் மீதான அண்மைய கோபங்கள் விலக முற்பட்டு, பெருமையாகவும் இருக்கிறது.
எழுதக் கிடைப்பது அளவில்லாததாக இருக்கிறது. யாருக்கும் எதற்கும் எழுத்து மு(றி)டிந்துவிடப் போவதில்லை. சூழ்ந்திருக்கும் சூழ்நிலையின் இறுக்கம், அளவற்ற எழுத்தின் கழுத்தை முறித்து விடப்பார்க்கிறது. நுகர்நிலையை விட, வாழ்நிலை மதிப்பு மிகுந்தது. பல சமயங்களில் அதுவே மிக முக்கியமானதுமாகிறது.
அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்புசால் நன்றிகள்.
தீபாவளி வரைக்கும் எனக்கு பணிப்பளு இருப்பதால் அவ்வப்போது வந்து போகிறேன். முற்றிலுமாக எழுத முடைப்பட்டு வராமல் போய்விடாமல்... தவிர, நேரம் என் கைக்குள் அகப்படும்பொழுதெல்லாம் நண்பர்களின் வலைத்தளங்களுக்கென நேரத்தை அவிழ்த்துவிடுகிறேன்.
வரும் 27-07-09 முதல் 02-08-09 வரை வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். அவ்வாரம் முழுக்க நண்பர்கள் அங்கே எட்டிப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்!
சுவாரசியமான பதிவர் என எனக்கென மதிப்பளித்து விரு(ந்)தளித்த நண்பர்கள் குடந்தை அன்புமணி மற்றும் விதூஷ் ஆகியோருக்கும் போன் செய்த, மடல் அளித்த, மனதில் நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் அளவில்லாத நன்றிகள்!!
அன்பின்
ஆதவா
செவிப்படலத்தைக் கிழித்தெறியும் கொடூர கர்ஜனை, சுண்டித் தெறிக்கும் நிறத்திலான காமம் விறைக்கும் கவர்ச்சி நடனங்கள், புத்திக்கு சற்றும் எட்டாத மொழி ஆளுமை, மதுவினுள் முயங்கி அனர்த்தமாகப் பிறழ்ந்துவரும் இசை
ஆங்கிலப்பாடல்களுக்கான நமது உருவம் மேற்படி கூறியதைப் போன்றுதான் பலரின் மனதில் இருந்து வருகிறது. பரவலான இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எப்பொருளினும் தேடுபொருளுள்ளது என்பதே என் கருத்து. பாடல்கள், அது சொல்லவரும் உள்ளர்த்தம், அதனுள் பிரித்து நாமெடுக்கும் கருத்து என்று பலவகையான தேடல்களை உள்ளடக்கியது. தமிழிசைப்பாடல்களில் ஓரிரு பாடல்களைத் தவிர்த்து ஏனையவை யாவும் சகிக்க இயலாததாகவும் சலிப்பின் உச்சமாகவும் இருப்பதை மக்கள் எப்படித்தான் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மொழி எனும் நரம்பு வெறும் சக்கைகளைப் பின்னிக்கொண்டு செல்கிறதோ எனும் உணர்வு ஒவ்வொரு பாடலினிடையேயும் தோணுகிறது. தப்பிப் பிழைப்பது சில பாடல்களின் வரிகள்.
Life for Rent (2003) தொகுப்புக்கு முன்னரே Didoவின் அறிமுகம் Thank you எனும் பாடலில் ஏற்பட்டது. உச்சஸ்தாயில் குதித்து பாடிவிடமுடியாத மென்குரலைப் பெற்றிருந்த அவள், கவர்ச்சி எனும் மாயவலையினுள் வீழ்ந்திடாதவாறு உடற்கட்டையும் வைத்திருந்தாள். டைடோவுக்கு எப்பொழுதும் இந்தியாவின் மீதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருந்திருக்கிறது. Life for Rent தொகுப்பில் Mary in India எனும் பாடலைப் பாடியிருந்தாள். இப்பொழுது சமீபத்தில் வெளிவந்த Safe Trip Home தொகுப்பில் Let's Do the Things, We Normally do எனும் பாடலில் இந்திய பெண் டாக்ஸி ட்ரைவரின் ஒருநாள் வாழ்வை மையப்படுத்தி பாடியிருப்பது அவள் கொண்டிருக்கும் இந்தியப்பாசத்தின் மடங்கு அதிகரிப்பதாகவே இருக்கிறது.
பரபரப்பாக இயங்கும் இந்திய நகரங்களில் ஒன்றான மும்பை நகரத்தின் காலைப்பொழுதில் டாக்ஸியில் முதல் பயணியைத் தேடுவதாகத் தொடங்கும் இப்பாடலின் முதல் காட்சியே மென்மையாக ரசிக்க வைக்கும் ஹைக்கூ. அந்த பெண் ட்ரைவர் சாலையின் மீதுண்டான கவனத்தையும் குழந்தைகளைக் கட்டித் தவிழமுடியா தவிப்பையும் அடுத்தடுத்த காட்சிகளிலேயே நாம் உணர்ந்து கொள்ளலாம். மும்பை நகரத்தின் சூழல் ஒரு டாக்ஸியின் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்கிறது. பயணிப்பதற்காக பயணிகள் ஏறுகிறார்கள். அந்த பெண் ஓட்டுனர் எல்லாவிதமான பயணிகளையும் சந்திக்கிறாள். ஒரு பெண் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பச்சைப் பட்டாணியை உரிக்கும் பொழுது மாநகரத்தின் அவசர சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அதே பெண், வீட்டுக்குள்கூட நுழையாமல், தன் குழந்தையைச் சுமந்து கொண்டு வேலைக்காகக் காத்திருக்கும் கணவனிடம் குழந்தையைப் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவது, நகரமயமாக்குதலின் இயந்திரத்தனத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இருவரும் ஒத்து அமர்ந்து குழந்தையைக் கொஞ்சிட நேரம் அமைவதில்லையென வாழ்க்கையின் சூத்திரம் அவர்களுக்குள் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த பெண் ஓட்டுனர், தான் வழக்கமாகச் செல்லுமிடத்திற்குச் செல்லுகிறாள். உணவு உண்கிறாள். வளையல்களை வாங்குவதற்காக அவள் சில கடைகளை நாடுகிறாள். மீண்டும் பயணம்.
ஒருநாளில் அவள் சந்திக்கும் பயணிகள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்.. குடும்பத்துடன் ஒன்றியவராய், குடும்பமே அற்றவராய், தொழில் வளர்ச்சியில் முனைந்து கொண்டிருக்கிறவராய், பணிக்கென குடும்ப சந்தோஷத்தை இழப்பவராய், ஒரு குடிகாரராய், யாருமற்ற தனிமை சிக்கிவிட்டது போன்று கட்டித் தவழும் ஒரு காதல் ஜோடிகளாய் இப்படி எல்லா வகையிலான மனிதர்களையும் அவள் பின்னிருக்கையின் வழியே சந்தித்துக் கொண்டிருக்கிறாள். இரவில் ஒரு முதியவளை இறக்கிவிட்டு அவளைப் பாசத்துடன் பார்க்கும் பார்வையில் அவளின் இன்மையும் ஏக்கமும் வழிகிறது. சட்டென்று தன்னிலை திருந்தியவளாய் பயணத்தைத் தொடருகிறாள். முடிவில் தனது டாக்ஸியையே வீடாக்கி படுத்துறங்குகிறாள்.
பெண்ணின் அரவணைப்பு, ஒரு புறாவின் இறகில் ஒளிந்து கொள்வதற்கு சமமாகிறது என்பதை நாம் வாழ்வில் காண்கிறோம். சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களை இந்த பெண் டாக்ஸி ட்ரைவரோடு ஒப்பிடும் பொழுது ஒப்பிடமுடியாத தூரத்திற்கு அப்பால் அவர்கள் விலகி நிற்பதையும், பயணிகளின் மீதான அக்கறையை ஆட்டோ ஓட்டுநர்கள் தவறவிடுவிடுவதையும் காணமுடிகிறது. இப்பாடலின் வழியே டாக்ஸி ட்ரைவரினுள் இயல்பாகவே மிதந்து கிடக்கும் அக்கறைத்தனத்தைக் காணலாம். பயணிகளோடு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது தனது சந்தோஷமெனத் துள்ளுவது, இரவில் தனிமையாக பயணிக்கும் முதியவளை தவிப்போடு பார்ப்பது, தெருவில் சாலையைக் கடந்துசெல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து சிரிப்பது போன்றவை உதாரணங்களாக்கலாம்.
இப்பாடலின் வழியே வாழ்வின் எல்லா ஆதாரங்களிலும் பெண்மையின் சுவடு இருந்தாகவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏதோவொரு குறுநகரங்களில் தனிமையை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் குறித்த எண்ணங்கள் தொடர்ந்து எழுகின்றன. வாழ்க்கையின் ஒருநாளைய பக்கத்தைத் திருப்பும் சமயங்களில் அந்நாள் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை முன்னே ஓடும் மனத்திரை முடிவு செய்வது போலும் இப்பாடல் எனக்குத் தோன்றுகிறது.
பெண் ட்ரைவராக நடித்திருக்கும் ஸஹானா கோஸ்வாமியின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. குறிப்பாக அவரது கண்கள் ஓரளவு நடித்திருக்கின்றன. பெண் டாக்ஸி ட்ரைவரைப் போன்றே மாறிவிட்ட அவளது அலங்காரம் ரசிக்கவைக்கிறது. பொருத்தமான தேர்வு. பாடல் காட்சிகளைப் பொருத்த மட்டில் டாக்ஸி ட்ரைவரின் ஒருநாள் வாழ்க்கை என்றாலும், பாடல்வரிகள் உணர்த்துவது வேறு என்னவோதான்..
Armored cars and tanks and guns
came to take away our sons
And everybody’s stood behind
The man behind the wire
என்ற வரிகள் Paddy McGuigan எழுதிய ஐரிஷ் இனப்பாடல் "The men behind the wire" என்ற பாடலிலிருந்து கடன்வாங்கி எழுதப்பட்டிருப்பதால் இப்பாடல் டைடோவை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது என்றாலும் பாடலின் வெற்றி அதனை மறைத்து நிற்கிறது..
டிடோவுக்கு இப்பாடல் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துவிடவில்லையெனினும் ஒரு இந்தியனாக, இப்பாடல் எனது புலன்களின் தாகத்தைத் தீர்த்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
சுட்டி : http://www.youtube.com/watch?v=EKR_bYiBf20
பிரிவுகள்
- அஞ்சலி (1)
- அனுபவம் (16)
- அறிவிப்பு (2)
- இலக்கியம் (9)
- ஈழம் (2)
- கட்டுரை (4)
- கவிதை (67)
- காதல் (23)
- காமம் (3)
- குறுங்கவிதைகள் (19)
- சினிமா (15)
- சிறுகதை (7)
- சிறுவர் கதைகள் (3)
- சொர்க்கத்தில் ஒரு காதல் (10)
- தமிழ் (1)
- திரை விமர்சனம் (1)
- நாகேஷ் (1)
- நானும் அவளும் (6)
- பாடல் (5)
- பால்ய கவிதைகள் (20)
- புத்தகம் (2)
- வலை (5)
- விமர்சனம் (6)
பேழை
-
▼
09
(62)
-
►
March
(15)
- பிடித்த பதிவுகள் - மார்ச் 2009
- ஊஞ்சல் பெண்
- பழைய புத்தகம்
- ஒழுகியது புவிப்பந்து
- அ, ஆ கவிதைகள் (18+ மட்டும்)
- சாளரங்களினிடையே ஒரு காதல்
- பூச்சாண்டிகள்
- எலக்ட்ராவின் பிறப்பு
- கொஞ்சம் காசு, நிறைய சுகம்
- ரஷ்யாகாரியோடு காதல்.. பாகம் 2
- ரஷ்யாகாரியோடு காதல்
- முத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..
- முகவரி
- தெய்வக் குடிலுக்குள்.....
- பிளவுபட்ட கரைகள்
-
►
March
(15)
நண்பன் எழுத்து
-
...க் கதைகள்6 hours ago
-
சமூகமும், நிகழ்வுகளும்...13 hours ago
-
அழகும், அர்த்தமும் கொண்ட சில தருணங்கள்14 hours ago
-
வாழ்நாள் இதழ்...!14 hours ago
-
நாட்களின் மீது புரளும் நினைவுகள்16 hours ago
-
இளையராஜாவின் -நாத உரையாடல்கள்1 day ago
-
Australia1 day ago
-
-
நண்பர்களின் காதலிகள்1 day ago
-
கொஞ்சம் தேநீர்-அவர்கள்!2 days ago
-
மனிதனைத்தேடி.........4 days ago
-
வெறுமையின் பாரம்...5 days ago
-
அரசியல்1 week ago
-
-
உறவுகளாலான உணர்வுகள்..1 week ago
-
நானோ பிரபஞ்சத்தில் பேரிடி1 week ago
-
குடியரசு தின வாழ்த்துகள்!2 weeks ago
-
வெப்பத்தின் தாக்கம்..!2 weeks ago
-
பிறந்த நாள் வாழ்த்துகள்1 month ago
-
ஒரு கவிதையும் குழாய்ச் சண்டையும்2 months ago
-
அழகு=கடவுள், காதல்=பணம்2 months ago
-
-
மாயை!!!!!5 months ago
-
Creativity / Recycle5 months ago
-
மகாராணி6 months ago
-
மீன் தொட்டி. >மூன்று கவிதைகள்7 months ago
-
பதிலைத் தேடிய கேள்விகள்...7 months ago


