அப்பா - மிளகு கவிகள்



எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று!

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

அவரிடமிருந்து அதட்டல்
"வேளைக்கு உணவிடாவிடில் அல்சர் வரும்"
இது அக்கறையா?
எச்சரிக்கையா?

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

சண்டை ஓய்ந்த பின்னே
அச்சம் தொத்தும்
நாளை எனக்கெதிரேவும்
நடக்கலாம்.

XxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXxXx

குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.

Comments

எல்லாமே நல்லாருக்கு என்றாலும் முதலும், கடைசியும் சூப்பர். இரண்டும் இரண்டுவித பார்வைகளை தருகின்றன.
//எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று//

ம்ம்ம்.. நல்லா இருக்கு ஆதவா..
Anonymous said…
குழந்தைப்பருவத்தின் பரிமானம் பரிமாறப்பட்டுள்ளது....

குறையை கண்டு இருந்தால் பயம் தான்....

எச்சரிக்கையாய் அக்கறைத்தாங்க....

இதாங்க உண்மை.....

மனித இயல்பு........

ஏனோ நீங்க அடித்தது மட்டும் வலிக்கிறது...(கவிதையில் தான்)
ஆனா குழந்தை மனதின் வலியும் இதில் உணர்த்தியிருப்பது தான் சிறப்பு....... நல்லாயிருக்கு ஆதவன்.....
sakthi said…
குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.

ஏன் அப்படி ஆதவா???
அத்தனையும் நல்லா இருக்கு ஆதவா.
கடையி கவிதை சட்டென்று அறைகின்றது. மற்றவைகளை இன்னொரு முறை படித்து விட்டு பிறகு வருகிறேன்.
\\தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்
\\

சிறந்த மகனாக தொடங்கி ...


முடிவில் ...

இதயத்தில் அடித்தது ஏனோ வலிக்கின்றது
அமுதா said…
நன்றாக உள்ளது என்றாலும் ஏனோ அதன் "நெகடிவ்" கருத்துகள் இரசிக்க விடாது வலி தருகின்றன.
Anonymous said…
நல்லா இருக்கு ஆதவா.

mankuthiray
அழகிய அன்பான மகனாக தொடங்கிய உங்க கவிதையோட்டம் இறுதியில் நெஞ்சில் அடித்து மனதில் வலி ஏற்படுத்திவிட்டது ஆதவா
ஆதவா... சின்ன நெருடலினூடே ஏதோ ஒரு ஆழத்தை உணர செய்தன கவிதைகள்...
//அவரிடமிருந்து அதட்டல்
"வேளைக்கு உணவிடாவிடில் அல்சர் வரும்"
இது அக்கறையா?
எச்சரிக்கையா?//

இது அக்கறை கலந்த எச்சரிக்கை...

அப்பா மிளகுக் கவிகளில் கடைசிக் கவிதை மிளகு போலவே காரமாக இருக்கு ஆதவன்...
ஆதவா said…
மக்கள் அனைவருக்கும் எனது நன்றி... எல்லோருமே குறிப்பிட்டிருந்தது அந்த இறுதிக் கவிதையைத்தான்.

இவை அனைத்துமே (என்னுடைய)ஒரு கதையின் வழியே வெவ்வேறு காலகட்டங்களில் பிறந்தவை. ஒரு தந்தை மகன் உறவில் ஏற்படும் விரிசல்களும் புரிதல்களும் நிறைந்த குழப்பத்தையே ஓரளவு கவிதையாக்கியிருக்கிறேன்.

இறுதி கவிதையானது மகன் தன்னையே உணர்ந்து கொண்டதைக் குறிக்கிறது. கவிதையில் காலம் மிக முக்கியம்... அக்கவிதையை இறந்த காலத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இதயத்தில் அடித்து பழிதீர்த்து விட்டான்.. அதற்கு அடுத்தது இன்னும் தந்தையை புரிந்து கொண்டானா இல்லை அப்படியே தொடருகிறானா என்பது வாசகர் யூகம்.

இக்கவிதைகளைத் தனித்தனியே படித்துப் பாருங்கள்.... வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்...

அன்புடன்
ஆதவா
தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்//

நல்லா இருக்கு...
குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.//

வித்தியாசமாக இருக்கு ஆதவா...

ரசித்தேன்...
ஓட்டு போட்டுவிட்டேன்...
வனம் said…
நன்றி ஆதவா

ம்ம்ம் இன்று சரியாக இருக்கின்றது

தங்களின் உதவிக்கு நன்றி

இராஜராஜன்
//தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்//

சதை என்ற கொச்சை தமிழ் சொல்லை "தசை" என்று மாற்றி பொருத்தியிருப்பது,
வார்த்தைகளை எவ்வாறு கவனமாக கையாள்கிறீர்கள் என்பதற்கு தக்க‌ சான்று.

//குறைந்த வயதினில்
கன்னத்தில் ஓங்கியடித்தார்
தோள் தாண்டி பழிதீர்த்தேன்
இதயத்தில் அடித்து.//

இந்த‌ வ‌ரிக‌ள் என் க‌ன்ன‌த்தில் அறைந்து விட்ட‌தாய் உண‌ர்ந்தேன்.

ஃபேண்டஸியிக்கு மட்டுந்தான் ஆதவன் என்ற கூற்றை தவிடுபொடியாக்கிய கவிதை.

யதார்த்தமும் உங்களுக்கு நன்றாகவே வருகிறது.

அச‌த்த‌ல் ட‌ச் !!!!!!!!!!
கவித சூப்பர்ண்ணே...

குறிப்பிட்டு சொல்ல விரும்ப வில்லை..அனைத்து வரிகளும் நன்றாக உள்ளது...
வோட்டீட்டன்...
ம்ம்ம்...
மீறுகிற குணம் இயல்பாகவே மனிதருக்குள் இருக்கிறது. அதிலும், தந்தை, மகன் உறவில் இது அதிகமாகவே இருக்கிறது.
Unknown said…
நல்லாயிருக்கு.....
//
எனது எல்லா செய்கைகளும்
தந்தையைப் போலுள்ளதாம்
பயமாகத்தான் இருக்கிறது
அவரைப் போல வந்திடுவேனோவென்று!//

-:)
ஆதவா அருமை.......
முதல் கவிதை... அந்த படம் அருமையா இருக்கு. நல்ல தேர்வு.

அடுத்த கவிதை அப்பாவின் குனங்களிலிருந்து விலகும் அல்லது அவரது சுபவங்களில் பயம் கொள்ளும் ஒரு மகனின் பயமாக இருக்கின்றது.

இரண்டாவது கவிதையில் நீங்கள் கேட்கும் கேள்வியன் பதில் இரண்டுமேதான். அக்கரையான அதட்டலில் அவரின் அனுபவமும் கலந்திருக்கும்

மூன்றாவது உண்ர்ச்சி.
இது எல்லோருக்கும் உண்டாவது. மிக எதார்த்தமாக சின்னதா அழகா சொல்லி இருக்கீங்க,
அப்பா யாருடனோ அல்லது நம்மிடமோ வாக்குவாதம் ஏற்படும் போது நம் மனம் அப்பவின் மனதிலேயே குவிந்து நிற்கும்.

நான்காவது... வருங்காலத்தைப் பற்றிய பயம். சிறிய வார்த்தைக்குள் அடைத்திருக்கின்றீர்கள்.

ஐந்தாவது.... இதற்கு முன்பே சொல்லி விட்டனேன்.
ஆதவா,
தலைப்பு, புகைப்படம், கவிதைகள் என எல்லாமெ நல்லாருக்கு.
எனக்கு நெருக்கமான உணர்வுகளைத் தருகிறது இக் கவிதைகள்.
அன்பு ஆதவா எல்லா கவிதைகளுமே என் மனதிற்கும் மிக நெருக்கமாக இருக்கிறது, அருமையான கவிதைகள்.
thamizhparavai said…
பலரின் உள்ளம் தொடும் அனுபவக் கவிதைகள். நல்லாருக்கு ஆதவா...
ஆதவா said…
நன்றிங்க வேத்தியன்,
வனம்,
அ.மு.செய்யது. (மிக்க நன்றிங்க தல.)

நன்றிங்க வழிப்போக்கன்,
மாதவராஜ்,
அண்டோ... (வரவுக்கு வரவேற்புகள்)
பித்தன்..
அத்திரி, அன்பு, சென்ஷி, தமிழர்ஸ்
ஆதவா said…
ஒவ்வொரு கவிதையையும் ரசித்தமைக்கு நன்றி ஆ.முத்துராமலிங்கம்
நன்றிங்க ச.முத்துவேல்... யாத்ரா, தமிழ்பறவை..

<<<<< அனைவருக்கும் எனது நன்றி >>>>>
மிக சுருக்கமாக எழுதியிருந்தாலும் சொல்ல முடியாத ஒரு விசயத்தைச் சொல்லிவிட்டீர்கள்!!!

தேவா.
Rajeswari said…
கடைசி வரிகள்..அப்பப்பா என்ன சொல்றதுன்னே தெரியல ஆதவா..நான் எங்கேயோ போயிட்டேன்.

ரொம்ப அருமை...
ஆதவா said…
மிக்க நன்றி தேவன் சார்,

நன்றிங்க ராஜேஷ்வரி மேடம்
எல்லாவற்றையும் விட அந்தக் கடைசி வரிகள்.. என்னவோ செய்து விட்டன ஆதவா.. உண்மையிலேயே நாம் அதை ஏதோ ஒரு கணத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.. எளிமையான வார்த்தைகளில் அருமையான கவிதைகள்.. வாழ்த்துக்கள்
""தானாடாவிடினும்
தன் தசை ஆடும்
சச்சரவுகளுக்கு மத்தியில்
அவர் மனம் புண்படுகிறதாவென
பார்த்துக் கொண்டேன்""

அருமை உங்களின் தந்தையின் மனதை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்.