சாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்

131007இந்த வெற்றியை வார்த்தையால் சொல்லி தீர்த்துவிடமுடியுமா? பதிவுகளால் என் மனதில் தேங்கியிருக்கும் ஆக்ரோஷமான மகிழ்வை எழுதிவிடமுடியுமா?? தெரியவில்லை. இந்தியா வென்றது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு… நான் பிறந்தபிறகு பார்க்கும் முதல் உலகக் கோப்பை கைப்பற்றல்!!! மீண்டும் அதன் பின் தோணி!!!

கிட்டத்தட்ட நான்கு உலகக் கோப்பைகள் பார்த்துவிட்டேன்.  (96, 99, 03, 11) ஒவ்வொரு முறையும் இந்தியாதான் ஜெயிக்கும், இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என்று பிரார்த்தனையில்லாத பிரார்த்தனையை செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அணி திணறும் பொழுது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நூறு கோடி இதயங்கள் அச்சமயத்தில் வேகமாகத் துடிக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் (2003 தவிர) இச்சமயம் அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் சிறப்பாக கேப்டன் வியூகத்தையும் எல்லா வித ஆட்டங்களிலும் முண்ணனியில் நிற்கும் திறமையையும் பார்க்கும்பொழுது இம்முறையும் வெல்லவில்லையெனில் வேறு எம்முறைதான் வெல்வது? 131003

இதுவரை இப்படியொரு நீண்ட கிரிக்கெட் தொடரைப் பற்றி நான் எழுதியதேயில்லை, எழுத நினைத்ததுமில்லை. ஆனால் இம்முறை எழுதாமலிருக்க முடியவில்லை. அந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறேனோ எனும் சந்தேகம் எனக்குள்ளேயே. இம்முறை எனது தந்தை, அம்மா, சகோதரி, சகோதரன் என என் வீட்டிலுள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தொடரை முழுக்க பார்த்தோம். சச்சின், தோனி என்ற இரண்டு பெயரைத் தவிர வேறெந்த பெயரையும் தெரியாத, கிரிக்கெட்டைப் பற்றி துளியும் தெரியாத என் தாயார் கூட ஆர்வமாகப் பார்த்தது கிரிக்கெட் எவ்வளவு தூரம் ஊறிப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது.

சனிக்கிழமை திருப்பூரில் பந்த் போன்றதொரு தோற்றத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அல்லது ஏதோவொரு சலூன்கடையில் கூட்டம் வழியப்பெற்று காணக்கிடைத்தது. எனது அலுவலகம் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து பல அலுவலகங்களும் கம்பனிகளும் கட்டாய விடுமுறை அளித்துவிட்டன. வேறெதற்காகவும் இப்படி விடுமுறை தருவார்களா என்பது சந்தேகம்தான். ஒட்டுமொத்த இந்தியாவும் கிரிக்கெட் முன்பு பிரார்த்திதபடியும் வெற்றியைக் கொண்டாடியபடியும் இருந்தது. இரவு அரைமணிநேரத்திற்கு இடைவிடாத வெடிச்சத்தமும் வாணவேடிக்கையும் நிறைந்திருந்தது. எனக்குத் தெரிந்து இப்படி மொத்த இந்தியாவும் ஒரேநேரத்தில் கோர்த்தது இச்சமயத்தில்தானிருக்கும்.. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத என் பாட்டி கூட இந்திய அணியின் வெற்றியை ரசித்ததுதான் உச்சகட்டமே!!131026

தோனி இறுதியாக அடித்த சிக்ஸும் அதற்கு அவர் பார்த்த பார்வையும், இத்தனைக்கும் பந்து சிக்ஸ்தான் என்பது கன்ஃபர்ம் என்றாலும் பந்து சரியாக சிக்ஸுக்கு இறங்குகிறதா என்று கவனித்து முகத்தில் சிரிப்பைக் காட்டியவிதம் இருக்கிறதே!!! நிச்சயம் இதனை வேறு எவராலும் செய்யமுடியாது. கங்குலியாக இருந்தால் அப்பொழுதே சட்டையைக் கழற்றி சுற்றியிருப்பார்!! வென்ற பிறகும் கூட தலைமை நடத்துனன் நான் தான் எனும் இறுமாப்பில் எங்கும் சுற்றவில்லை. ரஜினிகாந்த் “விடுகதையா இந்த வாழ்கை “ என்று பாடிக் கொண்டு செல்வதைப் போல அதன் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை… தோனியைப் பொறுத்தவரையில் இது இன்னுமொரு வெற்றி என்பதுதான்!! மிகச் சாதாரணமாக எதையும் கையாளும் திறன்மிக்கவராகவே இருப்பதால் இவரைவிடவும் மற்றவர்கள் தலைமையில் சிறப்பார்களா,… தெரியாது!

குழப்பமான இரண்டாம் டாஸில் இலங்கை ஜெயித்தபொழுதே வயிற்றில் இசையெழுந்தது. மும்பை பிட்சில் ஒளிவெள்ளத்தில் அதிக ரன்களை விரட்டுவது மிகவும் கடினமாயிற்றே. டாஸில் தோற்றதும் தோனி அதற்கான வேலைகளில் சரியாக இறங்கினார். ஆனால் மீண்டுமொருமுறை தவறு செய்தது ஸ்ரீசாந்தை உள்ளே இழுத்ததுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிக அழகாக ஸ்ரீசாந்த் நிரூபித்துக் கொண்டேயிருந்தார். ஒருபுறம் ரன்களே இல்லாத மெய்டன் ஓவர்கள், இன்னொருபுறம் வாரிவழங்கும் வள்ளல் ஓவர்கள் என சீராகவே சென்று கொண்டிருந்தது. ஜாஹீரின் ஆஃப் சைட் பாலில் தரங்காவின் மட்டை முத்தம் கொடுத்து சேவக்கின் கையில் தஞ்சம் புகுந்ததுதான் மிகப்பெரிய ப்ரேக்த்ரூ என்று நினைக்கிறேன். இத்தொடர் முழுக்க ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் இலங்கையின் தரங்க வும் தில்ஷானும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். எதிர்பார்த்தது போல தில்ஷானும், அரைசதமடிக்க முடியாத நிலையில் சங்ககராவும் சென்றுவிட்டதால் இலங்கையின் தளர்ச்சியடைந்த மிடில் ஆர்டர் ஆட்டம் காணும் என்று நினைத்தவனுக்கு ஜெயவர்தனவின் ஆட்டம் கண்ணில் மண் விழுந்ததைப் போலிருந்தது. ஒப்புக்குச் சப்பாணிகளாக குலசேகரவும் சமரவீராவும் பெராராவும் கடைசி கட்டங்களில் லைன் அண்ட் லெந்தில் குழப்பம் செய்த ஜாஹீரின் பந்துகளையே விளாசிக் கொண்டிருந்த பொழுது ஒட்டுமொத்த இந்தியாவும் சற்றே நம்பிக்கையை இழந்திருக்கும். அதுவரை 5 ஓவருக்கு 6 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த ஜாஹீர், முப்பத்தாறாவது ஓவரிலிருந்து மீகுதி ஐந்து ஓவருக்கு 54 ரன்களை வாரி வாரி வழங்கினார்.. ஜாஹீர் அப்பொழுது பதட்டமான சூழ்நிலையில் பந்தை வீசினார் என்பது நன்கு தெரிந்தது. 274 என்பது பைனல்களைப் பொறுத்தவரையில் இமாலய ஸ்கோர்தான். ஏனெனில் 300 பந்துகளில் மொத்தம் 26 பந்துகள்தான் உங்களால் வீணாக்க முடியும்.

131043சற்றேறக்குறைய நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தபிறகு ஷேவாக்கின் எல்பி அவர் மீது இருக்கும் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இத்தொடர் முழுக்க ஷேவக் உறுப்படியாக ஆடவேயில்லை. ஆரம்பத்தில் அடித்த 175 ரன்களே இன்னும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒரு முக்கியமான போட்டியில் இப்படியா டக் அவுட் ஆவது? அதுசரி, இவர் போனாலென்ன சச்சின் தான் இருக்கிறாரே என்றால் அவரும் ஒரு அவுட்சைட் எட்ஜில் நடையைக் கட்ட, கிட்டத்தட்ட சுத்தமாக நம்பிக்கையிழந்து திரைப்படம் பார்க்கலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் சச்சினைக் குறை சொல்ல ஒருவராலும் முடியாது. இன்று கோப்பை கையில் இருக்கிறது என்றால் அதற்கு சச்சினின் 482 ரன்கள் மிக முக்கிய காரணம். அட்லீஸ்ட் இன்னுமொரு 20 ரன்களைச் சேர்த்திருந்தால் மூன்று உலகக் கோப்பையில் 500 க்கும் மேற்பட்ட ரன் எடுத்தவர், அதிக ரன் எடுத்தவர் எனும் சாதனையை எட்டியிருக்கலாம். கடந்த 2003ல் தனிமனிதனாக பைனலுக்கு அணீயைக் கொண்டு சென்றவர் என்பதை நினைவுகூறலாம்.

131016இருந்தாலும் சச்சின் அவுட் ஆனதும் ஒருசிலர் என்னிடம் ”அப்பாடா, நூறு அடிச்சுட்டான்னா ஜெயிக்க மாட்டோம்” என்று சொன்னது எரிச்சலைக் கிளப்பியது. சச்சின் எனும் திறமையான ஆட்டக்காரனை இவ்வளவு கேவலப்படுத்த எப்படி துணிகிறார்கள்?

காம்பிர்+கோலியின் ஆட்டம் உண்மையிலேயே டாப் கிளாஸ் ஆட்டம். மிகச்சரியான பந்துகளைப் பொறுக்கி பவுண்டரிக்கு விரட்டியது இந்த ஜோடி, டில்ஷானின் ஃப்லையிங் கேட்ச் மூலமாக கோலி அவுட் ஆகினாலும் இந்தியா இன்னும் தோல்வி எனும் கோட்டுக்கு வந்துவிடவில்லை என்பதாகத்தான் இருந்தது. எப்பொழுதும் போல யுவி களமிறங்குவார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் வந்தது தோனி!!

தொடர் முழுக்க 40 ரன்களைக் கூட எட்டாத தோனி களமிறங்கிய்தும் உண்மையில் கோபம் வரவேயில்லை. ஏனெனில் தோனி சிலசமயங்களில் பேட்டிங் வரிசை மாற்றி திட்டம் போடக்கூடிய ஆள். யுவியை அவர் பெண்டிங் வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர, இந்தியா சார்பில் இலங்கைக்கு எதிராக தோனியின் ஆட்டம் மிகச்சிறப்பானதும் கூட. கொஞ்சம் கொஞ்சமாக பழைய தோனியின் ஸ்டைலில்லாத காட்டானாட்டம் திரும்பிக் கொண்டிருந்தது. அவரது ப்ரத்யேக குவிக் ட்ரைவ்கள் ஒவ்வொன்றும் 4 ரன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாலுக்குப் பால் இடைவெளி விடாமல் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு உறுப்படியில்லாத பந்துக்கு கவுதம் காம்பிர் அவுட் ஆனதில் வருத்தம்தான். உலகக் கோப்பை பைனல்ஸில் இதுவரை எந்தவொரு இந்தியரும் சதமடித்ததில்லை. (மொத்தமே 3 பைனலதானே?) காம்பிர் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்!! அதன்பிறகு 50க்கும் குறைவான ரன்களே என்பதால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது ஒருவேளை இலங்கை டபுள் ஸ்ட்ரைக் ஏதும் செய்யாதிருந்தால்…..

பிறகென்ன…. தோனியின் மொரட்டுத்தனமான ஆஃப்சைட் சிக்ஸரும், இறூதியாக பந்தைத் தூக்கியடித்து முரட்டுத்தனமாக நிதானித்துப் பார்த்த வின்னபில் சிக்ஸரும் தோனியின் பெயரை மிகப்பலமாக வலுவாக்கி விட்டது.131023

இச்சமயத்தில் தோனியின் வியூகம் பற்றியெல்லாம் பேசமுடியவில்லை. எனெனில் பவுலிங்கில்  கடைசி கட்டங்களில் தோனியைத் தவிர மற்ற அனைவரும் பதட்டத்துடனேதான் வீசினர். ஜாஹீரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டி வந்ததே பெரிய தவறுதான். இரண்டாவது ஸ்பெல்லை கொஞ்சம் முன்னமே கொடுத்திருந்தால் நிச்சயம் விக்கெட் எடுத்திருந்திருப்பார்… அதேபோல ஸ்ரீசாந்தின் ஓவரையும் முன்பைப் போல சச்சினுக்கும் கோலிக்கும் கொடுக்கவேண்டிய நிர்பந்ததை சமாளித்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேசமுடியவில்லை.

இந்த வெற்றிக்குப் பின்னால் தோனி போன்ற வீரர்கள் தவிர இன்னுமொருவர் இருந்தார்.. அவர் கேரி கிர்ஸ்டன்.. பயிற்ச்சியாளர். இறுக்கமில்லாத, வீரர்களுடன் சகஜமாகப் பழகக்கூடிய பயிற்சியாளர் என்ற பெயரெடுத்திருந்த கிர்ஸ்டன் ஒரு மிக நல்ல டீமை ஏற்படுத்திவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்துவிட்டு பிரிகிறார்.. கடந்த 2007 களில் பயிற்சியாளர்களுடன் தகறாரு, கேப்டனின் தலைமை சரியில்லாதது, லீக் போட்டிகளிலேயே மோசமாக வெளியேறியது என பலவகையில் பிரச்சனை வாய்ந்த அணியை தலைகீழாகத் திருப்பிப் போட்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும், நம்பர் டூ ஒண்டே அணியாகவும் மாற்றி T20 மற்றும் ஒண்டே உலகச்சாம்பியனாகவும் உருவெடுக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், சச்சின், கோலி, காம்பிர், தோனி போன்றவர்களை மிக அழகாக ஷேப் ஆக்கினார்… வெல்டன் கேரி!! இன்னுமொரு பயிற்சியாளர் இப்படி இருப்பாரா என்பது சந்தேகம்தான்!! ரியலி வி மிஸ் யூ கேரி!!

131022வெற்றி சிக்ஸர் அடித்தபிறகு இந்திய வீரர்கள் அழுததும் மகிழ்ச்சியுடன் சச்சினையும் கிரிஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானம் முழுக்க சுற்றி வந்ததையும் பார்த்தபொழுது என்னையுமறியாமல் கண்கள் கலங்கியது. தோனி ஒரு சகவீரராக அச்சமயத்தில் வந்தவர் பிறகு கேமராவின் கண்களில் சிக்காமலேயே போய்விட்டார்..

தொடர் நாயகனான யுவியை ஆரம்பத்தில் நானும் கூட எதற்காக யுவ்ராஜை எடுத்தார்கள் என்று கேட்குமளவுக்கு மோசமான ஃபார்மில் இருந்தவர் தொடர் நாயகனாகி வாயடைத்ததும், இந்த வெற்றி சச்சினுக்கானது என்று பெரிமிதத்துடன் சொன்னதும் யுவ்ராஜை பல உயரங்களுக்கு உயர்த்திவிட்டது. இந்த வெற்றி சச்சின், கும்ப்ளே, ட்ராவிட், கங்குலி போன்ற சகவீரர்களுக்கு டெடிகேட் செய்வதாகக் கூறிய தோனியும் பலமடங்கு உயர்ந்துவிட்டார்…131053 வெற்றியினால் மொட்டை அடித்து காணிக்கை செலுத்தியிருக்கும் அவரது பக்தியை மெச்சாமலிருக்க முடியாது….

இலங்கை தரப்பில் ஜெயவர்தனேயின் சதம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் வீசாததும் ஃபீல்டிங் குறைபாடுகளுமே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மலிங்காவின் இறுதி பந்துவீச்சு முழுக்க யார்கராகவே இல்லை. டாஸ்பாலாகவே சென்றது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. முரளிக்கு அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.. கடைசி போட்டியில் சோபிக்காமலிருந்தது வருத்தத்தைத் தந்தது. முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும். இந்திய அணிக்கு எப்படி சச்சினோ அதைப் போல இலங்கைக்கு முரளி என்பதை யாராலும் மறுக்கவியலாது. வெல்டன் முரளி. நீங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் மறக்கவியலாதது. சிறப்பான வீரராகவே முடிவு பெற்றீர்கள்!! ஐபிஎல் இல் சந்திப்போம்..

ஆகமொத்ததில் இந்தியா இரண்டு பைனல்களை சந்தித்தபிறகுதான் மூன்றாவதான அசல் பைனலுக்கு வந்தது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வென்றதே இன்னும் மனதை விட்டு தீராத நிலையில் இலங்கையைத் தோற்கடித்தது பல நாட்கள் நெஞ்சில் நிற்கும்.  மீண்டுமொரு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ….. இந்த வெற்றி இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி!!

தொடர்ந்து சாதியுங்கள் வீரர்களே!!

sachin cup நீண்டநாள் கனவு நனவான சந்தோஷத்தில் சச்சின்

dhoni cup

ரியல் சாம்பியன்

படங்கள் உதவி : http://espncricinfo.com

Comments

எங்க இன்னும் ஆதவா வரலையேன்னு பார்த்திட்டு இருந்தேன். எப்போ ட்ரீட் தரப்போறிங்க ஆதவா?
ஆதவா said…
எப்போ சந்திக்கிறோமோ அப்போ!!!
அப்போ நீங்களும் தருவீங்கதானே???
Well written...! What a fantastic match, Isn't it?
ஆதவா said…
நிச்சயமாக பிரணவம் ரவிக்குமார்... இந்த போட்டி வாழ்வில் மறக்கவியலாதது!!
Unknown said…
கலக்கல்
sakthi said…
என் கண்களும் மகிழ்ச்சியில் கலங்கியது ஆதவா ::)))

ஜெய் ஹோ ::)))
இந்த கிரிக்கெட் தொடர் முழுதும் பார்த்தேன் அதைவிட தங்களின் விமர்சனத்தை படிக்காமல் இருந்ததில்லை. சாம்பியனானபிறகு எங்கே ஆதவனின் விமர்சன பதிவை காணோமென்றிருந்தேன். ஒருவேளை மனம் மும்பை கிரவுண்டிலேர்ந்து வரவில்லையோ என்ற சந்தேகம்

அழகான கிரிக்கெட் விமர்சனம், கூடியவிரைவில் ஐபிஎல் விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன்

கங்கிராட்ஸ்ட் இண்டியன்ஸ்
வாழ்த்துக்கள் சகோதரம், நலமா?
இந்தியா வெல்ல வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு நிறை வேறி விட்டது. பதிவிலும் அழகாக வரணனை வடிவில் உங்கள் ஊர் முதல் வெளியூர்கள் வரை இந்தியாவின் வெற்றிக்கான உழைப்பின் உன்னதத் தன்மையை விளிக்கியுள்ளீர்கள். இனி உங்களின் வழமையான பதிவுகளோடு சந்திப்ப்போம் சகோதரம்.