ஒரு நாள் ஒரு இரவு பாகம் 4

மழையே பெய்யாம காரு நனைஞ்சிருந்தது. அதில கோடு போட்டு, காலெஜ்ல படிச்ச ஃபிகருங்க பேரோட மொத எழுத்து எழுதி, இவ பேரு என்னான்னு பசங்க வெளையாடிட்டு இருந்தானுங்க. மெக்கானிக் இன்னமும் போல்டை கழட்டிட்டு இருந்தாரு, நான் நெனைக்கிறேன், ரெண்டு மண்நேரமா ஒரு போல்டை கழட்டுற மொத மெக்கானிக் இவராத்தான் இருக்கும்... நானும் கொஞ்சம் எட்டிப் பாத்தேன். போல்டு மர தேஞ்சு போயி வகிடு மாறி போயிருந்துச்சு. மெக்கானிக் என்ன செய்யறதுன்னு தெரியாம தலைய சொறிஞ்சுட்டு இருந்தாரு. பக்கத்தில ஸ்கூபி கேம்ப் ஃபைர் போட்டு பக்கத்தில உக்காத்திட்டான். எனக்கு அங்க விட்டா வேற வழியில்ல. அப்படியே உக்கார்ந்துட்டு நெருப்பை ஊதிக்கிட்டு இருந்தேன். பொறுக்கிட்டு வந்த எல,தழ,குச்சியெல்லாம் பத்தலை, அது எத்தனை போட்டாலும் எரிஞ்சு சாம்பலாயிடுது. பத்தமாட்டேங்குது.. எங்களுக்கு நேரெதுக்கால தெருவிளக்கு, அதில இருந்து அப்படி ஒரு அம்பது அடி தூரம், இப்படி ஒரு அம்பது அடி தூரம் தான் வெளிச்சம்.. அதுக்கு அந்தப்பக்கம் இருட்டு... சாதாரண இருட்டு இல்ல, பேயிருட்டு. வெளிச்சம் இருந்தாத்தான் இருட்டு மறையும், இருட்டுன்னா, கொறைஞ்ச ஒளின்னு பாரதியாரு சொன்னார். இதைப் பார்த்திருந்தா, அப்படி சொல்லியிருக்கமாட்டாரு.
ஆக சுமாரா ஒரு நூறடி வரைக்கும்தான் சுள்ளி பொறுக்கி நெருப்புல போட முடியும்.

“இங்கல்லாம் சர்வ சாதாரணமா சிருத்தையும் காட்டுப்பூனையும் வரும்”

இப்ப எதுக்கு இதை மெக்கானிக் சொன்னாரு.?. எனக்கு வேற வயித்த கலக்கிடுச்சு. அப்படியே வந்தாலும் எல்லாரும் ஓடி எங்கயாச்சும் ஒளியலாம், எனக்கு நகர கூட முடியாதே.. அப்ப சிருத்தைக்கு மொத விருந்து நாந்தானா?

“வந்தா ஒன்னுஞ்செய்யாதுக, அதுக பாட்டும் போயிடுங்க.”

“மொதல்ல வந்தா இங்க எவனாச்சு நிப்பானான்னு பாருங்க”

”அதுகல ஒண்ணுஞ்செய்யாத வரைக்கும் அதுக நல்ல பிராணிகதான். நாமதான் பயந்துக்கறோம்”

அய்யா மெக்கானிக்கு, எப்பய்யா முடியும்?

“எப்பங்ணா முடியும்? ரொம்ப குளிருது வேற. நீங்களும் ரொம்ப நேரமா போல்டை திருப்பிகிட்டே இருக்கீங்க.

“இப்படி திருப்புங்களேங்ணா”

“எப்படி”

“க்ளாக் வைஸாதானே திருப்பறீங்க, ஆண்டி கிலாக்வைஸா திருப்புங்க”

“அப்படின்னா”

” லெஃப்ட்ல திருப்பிப் பாருங்ணா”

போல்ட ஆண்டி கிலாக் வைஸா திருப்பினாரு மெக்கானிக்... அட எழவே.. கழண்டு தொலைச்சிடுச்சுய்யா. மூணு மணிநேரமா உக்காந்திகிட்டு திருப்பு திருப்புனு திருப்பி பார்த்துட்டு, ஏதோ கோகுல் எதேச்சயா ஒரு ஐடியாவை கொடுக்கப் போயி அதுவே சரியாயிடுச்சு... ம்ம்ம்.... ஆமா..... இவரு உண்மையிலேயே மெக்கானிக்கா? இல்ல மெக்கானிக் மாதிரி நடிக்கிறாரா?

“ராடு மேல கப்பு மாதிரி வருமே, அது எங்க?”

“க்கும்... சக்கரத்தையே காணோம்னு ஒன்ரை மண்நேரமா தேடினோம், இதில கப்பு வேற இந்த இருட்ல தேடணுமாக்கும்?”

“அப்ப இன்னிக்கு இது விடியாது?”

மணி பத்து.

அந்த குளிருல எப்படி இருந்தோம்னு இப்ப நெனச்சாகூட நடுங்கும். செம குளிரு. எல்லாரு வாயிலயும் பேசினா பொகை. பிரபுதேவா டான்ஸ் ஆடறமாதிரி உதறல். இன்னிக்கு நைட் இந்த காட்டுலதானா? மெக்கானிக் நாளைக்குத்தான் பாக்கணும்னு சொல்லிட்டாரு. அவரு வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஆக்ஸிடண்ட் ஆனது ரெண்டு மணிக்கு, நைட் பத்து மணி ஆச்சு, ஒரே ஒரு போல்டை மட்டும் கழட்டி இருக்காரு... ம்ம்ம்..... நைட்டு எப்படியும் இங்க தங்க முடியாது.. மெக்கானிக்கோட பைக்ல ட்ரிப்புக்கு மூணுபேரா குன்னூர் போயி சேர வேண்டியதுதான். காரை இப்படியே விட்டுட்டு நாளைக்குதான் வந்து பாக்கணும்..

காருக்கு முன்னாடி ஏதோ சரக் சரக்குன் சத்தம். நல்ல இருட்டு வேற, எதாச்சும் வந்துச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியாம எல்லோரும் அமைதியா அந்த சத்தத்தையே கேட்டுட்டு இருந்தோம். சத்தம் நின்னது..

கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடியும் சரக்... சரக்................

எங்க வண்டிக்கு முன்னால கருப்பா ஒரு உருவம் நடந்து வந்திச்சு. கண்ணு மட்டும்தான் பளிச்சுனு தெரிஞ்சது.

அது....

அது.... காட்டுப்பூனை..

Comments

sakthi said…
ரெண்டு மண்நேரமா ஒரு போல்டை கழட்டுற மொத மெக்கானிக் இவராத்தான் இருக்கும்... நானும் கொஞ்சம் எட்டிப் பாத்தேன். போல்டு மர தேஞ்சு போயி வகிடு மாறி போயிருந்துச்சு. மெக்கானிக் என்ன செய்யறதுன்னு தெரியாம தலைய சொறிஞ்சுட்டு இருந்தாரு.

நல்ல மெக்கானிக்ன்னா இப்படித்தான் இருக்கனுமோ!!!
sakthi said…
இவரு உண்மையிலேயே மெக்கானிக்கா? இல்ல மெக்கானிக் மாதிரி நடிக்கிறாரா?


அதானே
sakthi said…
எங்க வண்டிக்கு முன்னால கருப்பா ஒரு உருவம் நடந்து வந்திச்சு. கண்ணு மட்டும்தான் பளிச்சுனு தெரிஞ்சது.

அது....

அது.... காட்டுப்பூனை..


நான் யானைன்னு இல்ல நினைச்சேன்!!!