ஒரு நாள் ஒரு இரவு பாகம் 2

கொஞ்சம் கொஞ்சமா பின்னாடி போயிட்டிருந்தேன். ஆனா அந்த ரோட்ல எவனோ வீணாப்போனவன் குழி வெட்டி வெச்சிருந்ததை கவனிக்கவே இல்ல. குழின்னா அகலமா இல்லை.. ஆழமா பந்தகால் நடற அளவுக்கு குழி. இங்க எந்த எழவு விழுந்துச்சோ தெரியலை இப்படி குழி வெட்டி வெச்சிருக்கானுங்க.. என்னோட இடது கால் உள்ள போயி பாதம் மட்டும் திரும்பிடுச்சு.. நீங்க மாடிப் படிக்கட்டில அவசரமா இறங்கி வரம்போது தெரியாம காலை சுளுக்கிடுவீங்களே, அதையே கொஞ்சம் ஃபோர்ஸா பண்ணினா எப்படி இருக்கும்... அப்படியே சுர்ருனு சுறா மாதிரி வலி ஏறிட்டு இருந்தது. படார்னு கரண்டுல கைய வெச்சமாதிரி எடுத்துட்டேன். . பசங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே வந்து காலைப் பார்த்தானுங்க.

“ குழி வெட்டியிருக்கிறது கூட கண்ணுக்குத் தெரியலயாடா?”

“கண்ணு மண்ணு தெரியாம சைட் அடிக்கிறதுங்கறது இதுதான்” யு ஹவ் டன் யுர் ஜாப்..

“ அநெகமா ஃப்ராக்ச்சர் தான் “

“காலை வெட்டித்தான் எடுக்கணும்”

”டேய்”

“ரொம்ப வலிக்குதாடா?”

“ம்”

”ரெண்டாவது பல்பும் வாங்கிட்டான்டா”

”ரெண்டா?”

”ஆமாம், நேத்திக்கே, ப்லாக் தண்டர்ல அருணாகொடிய தொலைச்சுட்டான்ல.”

“டேய் டேய்... அடங்குங்கடா”

“நடக்க முடியுமா?”

“ஷ்..... ஆஅ......... இல்லடா ரொம்ப வலிக்குது?”

“ சரி அப்படியே இழுத்துட்டு போய் கார்ல போடுங்கடா”

“டேய் மாப்ள, அதை விடுறா... அந்த யெல்லோ ஸ்லீவை பார்த்தியா... என்னா ஃபிகருடா...!!!........................................”

கால்ல சரியான வலி... அடி எடுத்து வைக்க முடியல. நான் நல்லா ஃபிகரை போட்டோ எடுக்கிறேன்ல. எவனோ பார்த்து பொறாமை பட்டுட்டான்னு நினைக்கிறேன்.. இங்கிலிஷ்ல ஜோம்பி படங்களைப் பார்த்திருப்பீங்களே... காலு ஒடிஞ்சி போய் ஒருமாதிரி இழுத்து இழுத்து நடப்பாய்ங்களே.......... அந்த மாதிரி ஆயிடுச்சு.. அப்படியே கைத்தாங்கலா (இழுத்துட்டு போய்) கார்ல விட்டானுங்க. எனக்கு என்ன கவலைன்னா..... இந்த சம்பவத்தை ரெண்டு பொண்ணுங்க பார்த்து சிரிச்சுட்டு போனாங்க.. ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆயிடுச்சு. ஆனா அப்படியிருந்தும் ஒண்ணூம் ஆகலைங்கறமாதி மூஞ்சி வெச்சுகிட்டேன்... நாங்க கீழ விழுந்தாலும் மீசையில மண்ணூ ஒட்டாதில்ல... (எங்களுக்குத்தான் மீசையே இல்லையே)

“ கோத்தகிரி போய் மாவு கட்டு போடவேண்டியதுதான்”

“என்னது?” மாவுக்கட்டா.... அட தேவுடா...

“ டேய் ராக்கி, என்னடா தின்னுட்டு இருக்கே?”

”லேய்ஸ் டா”

”இப்படியே தின்னு தின்னு தொண்ணூத்தஞ்சு கிலொ டா இவன்... இந்த லட்சனத்தில ந்யூ இயர்குல்ல ஒடம்ப கொறைக்கறானாம்...”

“ டேய் குறைச்சுக் காமிக்கிறேன் பார்டா”

“ குறைச்சுக்கோ, ஆனா காமிக்காதே”

”இவன் என்னடா மொனகிட்டே இருக்கான்....... கால் முறிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. நேரா ஊருக்குப் போயிடலாமா?”

“வேணாம்,... கோத்தகிரி போய்ட்டே போவோம்... (நான்)

“ஏன்?”

“வழியில ஃபிகரை பாத்தமாதிரி இருக்கும்ல”

“டேய், இவனுக்கு இன்னொரு கால் நல்லா இருக்குன்னு எகத்தாளம்”

நாங்க அப்படியே கோத்தகிரிக்கு திரும்பிட்டு இருந்தோம். காரு 20 ஸ்பீட்லதான் போயிட்டு இருந்தது. சின்ன ரோடு, எதிர்த்தாப்படி வர்ற காருகளுக்கு வழி விட்டுத்தான் போக முடியும். அவ்வளவு அகலம். ரோடுக்கு இங்கிட்டு (லெஃப்ட் சைட்) 2000 அடி டீலா. விழுந்தா கழுகு கூட தேடாது. எனக்கு வலி கொஞ்சம் இருந்தாலும் பேசிகிட்டே வந்ததுல பெரிசா ஒண்ணும் தெரியல. முன்னாடி ராக்கி உட்கார்ந்துட்டு இருந்தான், பின்னாடி முனகினமாதிரியே நான், ஸ்கூபி, ஸ்ப்ரிங்கி கொஞ்சம் தூரம் போயிருப்போம்.. திடீர்னு ஒரு சவுண்ட்... கார்ல ஏதோ வெடிச்சமாதிரி இருந்திச்சு. சட்டுனு இடதுபக்கம் மட்டும் லைட்டா இறங்கினாப்ல இருந்தது. கிர்ர்ர்ர்ர்ருனு ஒரு சவுண்டு.. கோகுல்தான் காரை ஓட்டினான். ஆனா அவனோட கண்ட்ரோல்ல கார் இல்ல... நடுரோட்ல போயிட்டிருந்த கார், கொஞ்சம் கொஞ்சமா சைட்ல போக ஆரம்பிச்சுது.. எங்களுக்கெல்லாம் ஒரே பயம்... ஒரேயொரு பயம்தான்... இன்னிக்கு சோலி சுத்தமாயிடுச்சு, எல்லோரும் பரலோகம்னு நினைச்சிட்டு இருந்தோம்.. கார் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ ஆயிட்டே இருந்தது... ஆனா சைட்ல பள்ளம்... ரெண்டாயிரம் அடி டீலா... விழுந்தா எதுவும் மிஞ்சாது....... ஒரு நிமிஷம் எல்லோரும் வந்து போனாங்க..... அய்யயோ ஃபிகரை போட்டோ எடுத்ததை ஃப்லிக்கர்ல ஏத்தமுடியாம போச்சே!!

எல்லோரும் கண்ணை மூடினோம்.....

தொடரும்

Comments

Anonymous said…
aathava serichi serichi....mudiyalai
Anonymous said…
நல்லதான் கதை சொல்லுறீங்க பாஸ். அப்புறம் என்னாச்சு பாஸ்.