காதலர்தினத்தில் ஒரு போன்

நம்மாளுங்களப் பாருங்க.. என்னிக்கிமே போன்ல பேலன்ஸ் வெச்சிருக்கவே மாட்டாய்ங்க. இன்னிக்கீன்னு பாத்து (FEB 14) முழுசா 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுவானுங்க.. கேட்ட
இலவர்ஸ் டேவாம்....

இப்படித்தான் போன வருசம் நமக்கேதுடா லவ்வர்; நமக்கேதுடா லவ்வர்ஸ்டேன்னு ரீசார்ஜ் பண்ணாம ரெம்ப லோ பேலன்ஸ்ல போனை வெச்சுருந்தேன்.. திடீர்னு ஒரு போன். கரெக்டா 10.00 மணி இருக்கும்.. அநேகமா ராவு காலம் எமகண்டம் எல்லாம் தாண்டி இருக்கும்னு நெனைக்கிறேன். எடுத்து பேசினா,

" ஹலோ, ஈஸ் திஸ் சூர்யா?"

அப்படீன்னு ஒரு பொம்பளக் குரல்வேற... குரல் கூட ரொம்ப ஸ்வீட் . நான்கூட ஏதோ நம்ம பார்ட்டியாட்டம் தெரியுதுன்னு கொஞ்சம் பவ்வியமாவே,

" ஏஸ், ஐயாம் சூர்யா. மே ஐ நோ ஹூஸ் திஸ்? " அப்படீன்னு நமக்கு தெரிஞ்ச இங்கிலீசெ போட்டுத்தாக்கினேன். அப்பவே உள்மனசு ஏதோ சொல்லிச்சு. 'டேய்! வேணாண்டா! இது வெவகாரமே சரியில்லன்னு' இந்த உள்மனசு எப்பவுமே இப்படித்தானுங்க,., நல்லதா நாலுவிசயம் நடந்துட்டு இருக்கும்போது எச்சரிச்சுகிட்டே இருக்கும். அத்த விடுங்க...

அவளும் கம்முனு இருக்காம இங்கிலீசுல, " ஐயாம் ஜென்னி ஃப்ரம் கோவை. ரிமெம்பர் மீ? வீ ஹாவ் மெட் இன்.........." அடுக்கீட்டே போனா.... அய்யோ சாமி.. நான் ஏதோ ரெண்டு வார்த்த இங்கிலீசு பேசுவேன். அதுக்காக ஏதோ வெள்ளக்கார நாட்டுல பொறந்தாப்படி நெனச்சுக்கிட்டா என்னாவறது?

" மேடம் தமிழ்லயே பேசுங்க." அப்படீனேன்..

" என்னோட பேரு ஜென்னி. நாம கோயம்புத்தூர்ல மீட் பண்ணினோம்ல. என்ன மறந்துட்டீங்களா? " அப்படீன்னா..

கோயம்புத்தூர்லயா... உள்ளூர்லயே நான் எவளயும் பார்க்கமாட்டேன். இதுல கோயம்புத்தூர்னா??? எப்போ ? எப்படி? தெரியலையே!!! சரி அதுக்காக தெரியலைன்னு சொன்னா நல்லா இருக்காதே! அவ வாய்ல இருந்தே உண்மைய வரவெச்சுப்புடுவோம்..

" ஆமாமாம் கொஞ்ச ஞாபகம் இருக்கு... நீங்க கிரிஸ்டீயன் தானே!? ஆனா பிஸினஸ் விசயமா நிறைய பேரை மீட் பண்றதால கொஞ்சம் மறந்துட்டேன்,,, உங்களுக்கு என்ன வேணும்?" கொஞ்சம் பவ்யத்தை கட்டுப்படுத்தியேதான் கேட்டேன்.

" இல்லை.. இல்லை..... ம்ம்ம்ம்.... நீங்க எப்படி இருக்கீங்க,,,"

" இதுக்குத்தான் போன் பண்ணீங்களா? சரியா போச்சு. நான் நல்லாத்தான் இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க,.? அட அன்னிக்கி மீட் பண்றப்போ நீங்க கூட எங்கயோ வொர்க் பண்றதா சொன்னீங்கல்ல? மறந்தேபோச்சு பாருங்க..."

இப்படி ஒரு பீலா உட்டாத்தான் கொஞ்சம் கரக்கமுடியும்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.

" நான் ஒர்க் பண்றேனா? யார் சொன்னது?"

அய்யய்யோ! மாட்டிக்கிட்டேனே!!... சூர்யா தப்பிச்சுக்கோடா..

" இல்லீங்க. உங்ககூட வந்தவரு சொன்னார்னு நினைக்கிறேன். (மறுபடியும் ஒரு பொய்) அத விடுங்க.. எதுக்காக போன் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

" ம்ம்ம்ம்... இன்னிக்கி கோயம்புத்தூருக்கு வரமுடியுமா? ப்ளீஸ்...

அய்யோ ரெம்ப கெஞ்சறாளே!! ஒரு வேளை லவ்வா இருக்குமோ... கடவுளே! மாட்டி வுட்றாதேப்பா! அய்யோ இன்னிக்கி வேலண்டைன் டே ல்ல.... முருகா காப்பாத்துப்பா!!! அடச்சே முருகண்ட வேண்டிக்கறேன்பாரு.. விநாயகா காப்பாத்து சாரே!! இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கே! சரி கொஞ்சம் தைரியமா கேட்ருவோம்..

" நீங்க எதுக்குங்க என்னை வரச் சொல்றீங்க?"

அய்யோ ஒருவேளை HDFC Bank ல இருந்து பேசறாங்களோ என்னவோ? சேசே இருக்காது.. நீங்க நல்லா இருக்கீங்கலான்னு பேங்கில இருந்து யாராவது கேப்பாங்களா?

" வந்து... இன்னிக்கி முக்கியமான நாளு ப்ளீஸ்.. எங்கிட்ட பேலன்ஸ் இல்ல.. நீங்க எனக்கு கூப்பிடமுடியுமா? ப்ளீஸ்.."

நெனச்சேண்டா!! முக்கியமான நாளுன்னாலே வேறென்ன... இன்னிக்கி லவ்வர்ஸ்டேதான்... மொதல்ல ஒரு ஃபோன போட்டு எனக்கும் உனக்கும் காதல்கீதல்லாம் ஒத்துவராதுன்னு சொல்லிப்புடனும்... அதுலயும் பாருங்க.. கரெக்டா ஒரு நிமிசத்துக்கு மேல பொண்ணுங்க கூப்புடுவாங்கங்கீறிங்க?? அதுக்கப்பறம் நாம தானே கூப்பிட்டு காச போனுக்கே கொட்டனும்,,,?

அடச்சே! பேலன்ஸ் வேற இல்லையே! இதென்னடா அக்கப்போரா இருக்கு./. அவனவன் லவ்வர் வெச்சுகிட்டு பேலன்ஸ் ஏத்தறான். நமக்கும் இதெல்லாம் தேவைதானா? ஒருவேளை ஆணா பொறந்ததுக்கு இதெல்லாம் அனுபவிக்கனுமோ? என்ன கண்றாவி இது.. சரி ஒரு ரீசார்ஜ் பண்ணீட்டு அப்பறமா பேசுவோம். இப்ப என்ன அவசரம்..
இருந்தாலும் மனசு மட்டும் பாருங்க. எப்பவுமே லொள்ளு பண்ணும்/ 'டேய் உடனே போன் பண்ணுடா'னு சொல்லுது.
சரி ஓகேன்னுட்டு ரீசார்ஜ் பண்றதுக்கு ஒரு கடைக்கு போனேன். அங்க என்னடான்னா, கூப்பன் இல்லியாம்.. ஈஸி ரீசார்ஜ் பண்றதுக்கும் பேலன்ஸ் இல்லையாம்... இது அவுங்க என்ன சொல்றாங்க தெரியுங்களா?
"உங்க ஆள கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்க.. கொஞ்ச நேரத்தில பண்ணிடறேன்."

அடப்பாவிகளா முடிவே பண்ணீட்டீங்களா? சரிசரி எனக்கும் பெருமதான்..

அதுக்குள்ள எனக்கு அஞ்சாறு மிஸ்டு கால் வேற.. நம்மள தொந்தரவு பண்றா.. என்ன பண்ணலாம். ஆங்,.. எதுக்கு தண்டத்துக்கு ஆபீஸ் போன் இருக்கு? அதுல இருந்து பண்ணுவோம். பில்லு நாமளா கட்டப் போறோம்?
உடனே ஆபீஸுக்கு போனேன். அங்க இருந்து அவளுக்கு பண்ணினேன்.. அவ பேரு என்ன சொன்னேன்... ஆங் ஜென்னி... என்ன பேருயா இது? ஜெனிபர் னு வச்சுருந்தா கூட ஏதோ பாடகியாச்சே அதுலயும் நமக்குப் புடிச்ச பாடகியாச்சேன்னு நெனைக்கலாம்... சரி அத்த விடுங்க.. ரிங் போவுது.. என்ன சொல்றாள்னு பாக்கலாம்.

" இவ்ளோ நேரமா? எத்தனை ரிங் வுட்டேன் தெரியுங்களா? நீ ரொம்ப மோசம் டா"

என்னது? எங்கிட்ட ரெண்டு வார்த்தைதான் பேசினா, அதுக்குள்ள வாடா போடான்னு பேசறாளே!! இதுதான் பொம்பளீங்க தந்திரங்கறதா? நான் மட்டும் விட்ருவேனா? தோ பாரு அடிக்கிறேன்..

" இல்ல,, அதுக்குள்ள சின்ன வேலை வந்துட்டுது. சரி நீங்க ஏதோ முக்கியமான நாளு அப்படி இப்படீன்னு சொன்னீங்க.. என்னது?"

பாத்திங்களா? நானே நெனச்சாலும் அந்த மரியாதை மட்டும் நம்மள விட்டு போய்டாது.. .

" என்ன நீ நீங்க வாங்க அப்படீன்னு பேசுற?"

' இல்லமா! அவ்வளவா பேசினது இல்லீல்ல.."

" சரி இன்னிக்கு கோயம்புத்தூர் வரமுடியுமா ? முடியாதா? "

" உன்னை ஒருதடவைதான் பாத்திருப்பேன். அதுக்குள்ளே வரச்சொல்றியே! எங்க வரது? எப்படி.? எதுக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்லுடா "

" காந்திபுரம் வந்துட்டு ஒரு மிஸ்டு கால் கொடு நான் வந்துற்றேன்.. மறந்துடாதே! என் செல்லம் நீ! வந்துடுவேன்ன்னு நினைக்கிறேன். இப்ப எனக்கு டைம் ஆச்சு.. வீட்டுக்கு போகனும் உனக்காக நான் மேக்கப் பண்ணீட்டு வரணும்.. கண்டிப்பா வந்துடுட்டா செல்லம். பாய்/ "

" ஹலோ? ஹலோ!!" சே! கட் பண்ணீட்டா! செல்லம்னு வேற சொல்றா.. கண்டிப்பா என்ன பாத்துருப்பா! இல்லாட்டி இப்படியெல்லாம் பேச முடியாது.. காந்திபுரத்துக்கு போகலாமா? இல்லை...

வேண்டவே வேண்டாம்.... அவகிட்ட ஏதாவது சொல்றதுக்காகவாவது போய்த்தான் தீரணும்.வீட்டுக்குப் போய் நல்ல புது ட்ரெஸ் போட்டுக்கிட்டேன்.. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னொருதடவ பல்லு தேச்சு, வாய் கொப்பளிச்சு, மேக்கப் போட்டுகிட்டு. நேரா வண்டியெ எடுத்து ஸ்டேண்ட்ல போட்டுட்டு பஸ் ஏறினேன்.

பஸ்ல போகப் போக என்னென்னவோ நெனைப்பு.. அவ எப்படி இருப்பா? அழகா இருப்பாளா? என்னோட நம்பர் எப்படித் தெரியும்? ஒரே கொழப்பமா இருக்கே! இது காதலா இருக்குமோ? அப்படி இருக்கும் போது நான் என்னன்னு சொல்றது? சே மனசு இருக்கே! இது பெரிய வம்பு புடிச்சது.. ஏதாவது நோண்டிக்கிட்டேதான் இருக்கும்.. தோ அப்படியே காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு வந்துட்டேன்... என்ன ஒரு மணிநேரம்தான்... மனசு அங்க இங்க நெனச்சுக்கிட்டே வந்தாலும் அவினாசி ரோட்ல வர்ற காத்துல தூங்கற சொகம் இருக்கே!! அடா அடா!!
இறங்கின உடனே மிஸ்டு கால் கொடுத்தேன்,. அட!! மிஸ்டு கால் கொடுக்கறதுக்கு நாம என்ன பொண்ணா? காலே பண்ணிடலாம்... (இடையில் ரீசார்ஜும் பண்ணிட்டேன்.. பின்ன? அந்த பொண்ணு போன பாக்கறப்போ பேலன்ஸ் லோ அப்படீன்ன நம்மள தப்பா நெனச்சுறாது? ) போன் ரிங் போவுது போவுது.. போய்கிட்டே இருக்கு.. யார்மே எடுக்கல,.. ஆஹா! வந்தது வேஸ்டு தானா? திரும்பவும் ரிங்க் வுடுவோம்... ஆங் இந்த தடவ எடுத்துட்டா!!

" என்னடா! இவ்ளோ லேட்டா!? நான் வந்துட்டேன் நீ எங்க இருக்க?"

" சாரிடா செல்லம்.. கொஞ்சம் மேக்கப் பண்றதுக்கு டைம் ஆச்சு... நான் நேரா ப்ளூமிங் பட்ஸ் போய் ஒரு பொக்கே வாங்கிட்டு வந்துடறேன்... நீ அங்கயே வெய்ட் பண்ணுடா!! "

டொக்.

இவளுக கொஞ்சம் மேக்கப் பண்றதுக்கே இவ்ளோ டைமா? அதுசரி! எதுக்கு பொக்கே வாங்கிட்டு வரணும்? இது ஏதோ வெவகாரம்தானாட்டம் தெரியுது... இது வேலைக்காகாது... திரும்பவும் ஒரு ரிங் வுடுவோம்.

" என்னடா! நான் வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுடா செல்லம்..

" இல்ல, அதுக்கில்ல. என்ன கலர் ட்ரெஸ் பண்ணீட்டு வரேன்னு கேக்கலாமேன்னுதான் ஃபோன் பண்ணீனேன்.

" சிவப்பு... அதுதானே சரியான பொருத்தமான கலர்"

பொருத்தமான கலரா? அய்யய்யோ! மனசு பக் பக் னு அடிக்குதே!

" அதுசரி யாருக்கு பொக்கே?"

" டேய்! ஒன்னும் தெரியாதவனாட்டம் நடிக்காதேடா! ஒன்னை வந்து வெச்சுக்கறேன்"

கன்ஃபார்ம்தான்... இவ லவ்வர்ஸ்டே பொக்கே தான் வாங்கப் போறா! நாம மாட்டிக்கிட்டோம்.... திரும்பவும் ரிங்..???? நோ! அவ வரட்டும்.

கொஞ்ச நேரம் அப்படியே திங் பண்ணீட்டு இருக்கச்சே, திடீர்னு முதுகுல ஒரு அடி!
திரும்பிப் பார்த்தா, அட நம்ம மயூரேசன். அற்புதராஜ், மதி!!

" என்னடா இங்க என்ன பண்ணீட்டு இருக்கே! ஊருக்கு வந்தா சொல்ல மாட்டியா?

" இல்லடா ஒனக்குத்தான் போன் பண்ணலாம்னு நெனச்சேன்.. இப்பத்தாண்டா வந்தேன்.. எப்படி இருக்கே!?"

" அதெல்லாம் நல்லாத்தான் இருக்கேன்.. யாருக்கோ வெய்ட் பண்றாப்ல தெரியுதே?"

" ஒரு பிஸினஸ் விசயமா ஒரு பொண்ண பாக்க வந்தேண்டா. வேற ஒன்னுமில்ல /"

" ஓ!! ஒன்னோட பிஸினஸ்ஸ மாத்தீட்டியா? பொக்கேயெல்லாம் விக்க ஆரம்பிச்சிட்டியா?"

ஆகா இவனுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை பக்கத்துல நின்னு ஒட்டுக் கேட்ருப்பானோ?

" உனக்கு எப்படிடா தெரியும்?"

" சும்மா கேட்டேண்டா... நீ எதோ சிவப்புக் கலர் ட்ரெஸ் பண்ண ஒருத்திய பாக்க வந்துருக்கேன்னு எனக்கு எப்படி தெரியும்?

" டேய் உண்மையச் சொல்லு.. எப்படிடா உனக்குத் தெரியும்? ஒட்டு கேட்டியா?"

உடனே ரொம்ப சிரிச்சானுங்க மூனு பேரும்..

" ஏண்டா! எதோ ஒரு பொண்ணு கூப்புட்டு வாங்க அப்படீன்னா வந்துருவியாடா? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டே" ன்னு அற்புதராஜ் சிரிச்சுகிட்டே சொன்னான்.

அடப்பாவிகளா இவனுகளோட வேலையா? மயூரேசன் பொம்பள குரல்ல பேசுவானே!! நான் மறந்தே போய்ட்டேனே! அடச்சே! என் வாழ்க்கையில இப்படி ஒரு ஒன்னாம் நம்பர் கேவலத்தை பார்த்ததே இல்லை.. இப்படி ஏமாத்திட்டானுங்களே!

" அண்ணன் நாக்கத் தொங்கப் போட்டு திருப்பூர்ல இருந்து வந்துருக்காரு.. பாவம்டா.. ஏதோ ஒரு ஃபிகர் மாட்டும்னு நெனச்சுருப்பான்.. அத்தயும் கெடுத்து குட்டிச்சொவரு ஆக்கீட்டீங்களேடா" மதி ரெம்ப எளக்காரமா சிரிச்சான்...

எனக்கு ரெம்ப அவமானமா போச்சு... நம்ம புத்தி எங்க போச்சு? ஏதோ ஒரு பொண்ணு பேசினா இப்படித்தான் வந்துடறதா? சே!!

" டேய் பாவம்டா அவன்.. அண்ணனுக்கு ஒரு ட்ரீட் வெச்ச எல்லாம் சரியா போய்டும்//// பாருங்கடா அவன் மொகத்த.. பயங்கரமான ஆசையோட வந்துருப்பான்னு நெனைக்கிறேன். எல்லாம் போச்சு.."" சிரிச்சுகிட்டே இருக்கானுங்க...

இவனுகளுக்கு எங்க தெரியப் போவுது? நாம் லவ் சொல்றதுக்காக வரலேன்னு? சொன்னாலும் நம்ப மாட்டானுங்க.. சரி என்ன பண்ண... தோ பசங்க ஏதோ ட்ரீட்னு சொன்னானுங்க... கொண்டாடிட்டு போக வேண்டியதுதான்... வேற வழி.. மூக்க அறுத்துப்புட்டானுங்க. ரெம்ப வருத்தமா இருந்தா பசங்க கம்முனு இருக்க மாட்டானுங்க... ம்ம்ம்ம்ம் இருந்தாலும் அது ஒரு பொண்ணா இருந்து அதை பாத்து லவ்வு கிவ்வு எல்லாம் வேண்டாம்னு சொல்லியிருந்தா கொஞ்சம் திருப்திதான்..... நமக்கு வாழ்க்கையில எல்லாமே ஏமாற்றம் தானே!!!!

(பிகு: காதலர் தினம் என்பதால் இன்று என் மொபைல் அணைத்தே வைத்திருப்பேன்... அரசல் புரசலாக அசின் என்னோட எண் கேட்டு வைத்திருப்பதாக செய்தி,... )
---------------------------------------------------------------------------------
14-02-2007, அன்று எழுதியது.

Comments

மிகவும் ரசித்தேன் உங்கள் காதலர் தினக் கொண்டாட்டத்தையும் திண்டாட்டத்தையும்...
//(பிகு: காதலர் தினம் என்பதால் இன்று என் மொபைல் அணைத்தே வைத்திருப்பேன்... அரசல் புரசலாக அசின் என்னோட எண் கேட்டு வைத்திருப்பதாக செய்தி,... )//

ஹா...ஹா...ஹா...இதுவும் ஒரு நாள் நடக்கலாம்...காதலர் தின வாழ்த்துக்கள் ஆதவன்...
உங்களுக்காவது குறைந்தபட்சம் ஃபோனாவது ( மிமிக்ரியாயிருந்தாலும்) வருகிறது. எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு நாள் வருகிறது அவ்வளவுதான்..
//உள்ளூர்லயே நான் எவளயும் பார்க்கமாட்டேன். இதுல கோயம்புத்தூர்னா??? //
இத நம்ப முடியலியே..
//மிஸ்டு கால் கொடுக்கறதுக்கு நாம என்ன பொண்ணா? காலே பண்ணிடலாம்... (இடையில் ரீசார்ஜும் பண்ணிட்டேன்.. பின்ன? அந்த பொண்ணு போன பாக்கறப்போ பேலன்ஸ் லோ அப்படீன்ன நம்மள தப்பா நெனச்சுறாது? ) //
ஹே ஹே..நீங்களும் மாட்டிக்கிட்டீங்க.. பார்த்தீங்களா.. நல்ல சுவாரஸ்யமான பதிவு ஆதவா.. காதலர் தின வாழ்த்துக்கள்..
ஆதவா said…
haaha.

மிக்க நன்றி புதியவன்....
ஆதவா said…
SUREஷ் கூறியது... உங்களுக்காவது குறைந்தபட்சம் ஃபோனாவது ( மிமிக்ரியாயிருந்தாலும்) வருகிறது. எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு நாள் வருகிறது அவ்வளவுதான்..

என்னங்க..... எனக்கு நிஜமாவே வரமாதிரி சொல்றீங்களே!!!

நன்றிங்க....
ஆதவா said…

கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
ஹே ஹே..நீங்களும் மாட்டிக்கிட்டீங்க.. பார்த்தீங்களா.. நல்ல சுவாரஸ்யமான பதிவு ஆதவா.. காதலர் தின வாழ்த்துக்கள்..


நன்றி கார்த்திகைப் பாண்டியன் அவர்களே!.... நானில்லைங்கோ அது!!!!!

காதலர் தின வாழ்த்துக்கள்..
கலக்கீட்டீங்க போங்க...
உங்க வசன நடை ரொம்ப நல்லா இருக்குங்க...
காதலர் தின நல்வாழ்த்துகள்...
:-)
அருமையாக எழுதியுள்ளீர்கள்>>
காதலர் தின வாழ்த்துக்கள்..
ஆதவா said…
மிக்க நன்றி வேத்தியன்...தேவன்மாயம்....
ஆதவா!

கலையிலேயே இதற்கு ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேனே... என்னாச்சு?
ஆஹா ஆதவா
கலக்கிப்புட்டீங்க‌
// இன்னிக்கீன்னு பாத்து (FEB 14) முழுசா 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுவானுங்க.. கேட்ட
இலவர்ஸ் டேவாம்....//

ம்ம் இதுதான் ஃபோன்லே காதலர்தினம் என்பதா
//" நீங்க எதுக்குங்க என்னை வரச் சொல்றீங்க?" //

எல்லாம் பார்ட்டிக்காகதான் இருக்கும்
//ஆங்,.. எதுக்கு தண்டத்துக்கு ஆபீஸ் போன் இருக்கு? அதுல இருந்து பண்ணுவோம். பில்லு நாமளா கட்டப் போறோம்?
//

நீங்களும் அப்படிதானா? ஃபோன் பேசுவதற்கு மட்டும் ஆஃபீஸ் போறீகனு கேள்விப்பட்டேன்
//" அண்ணன் நாக்கத் தொங்கப் போட்டு திருப்பூர்ல இருந்து வந்துருக்காரு.. பாவம்டா.. ஏதோ ஒரு ஃபிகர் மாட்டும்னு நெனச்சுருப்பான்.. அத்தயும் கெடுத்து குட்டிச்சொவரு ஆக்கீட்டீங்களேடா" மதி ரெம்ப எளக்காரமா சிரிச்சான்...//

இதை கொஞ்சம் நல்லா.. திரில்லோடு எழுதிருக்கலாம்
என்னமோ காதலர் தினத்தை ஏப்ரல் 1ம் தேதியாக்கிட்டாங்க உங் ஃப்ரண்ட்ஸ்

வாழ்த்துக்கள், எழுத்தோட்டம் ரொம்ப நல்லாயிருக்கு
ஹேமா said…
ஆதவா,இனிய காதலர்தின வாழ்த்துக்கள்."வீட்ல ஆளுங்க".அதனால பின்னூட்டம் இப்போ இல்ல.இன்னும் வாசிக்கல.
Anonymous said…
உள்ளூர்லயே நான் எவளயும் பார்க்கமாட்டேன். ***************************
இதை நாங்க நம்பனும்....
Anonymous said…
(பிகு: காதலர் தினம் என்பதால் இன்று என் மொபைல் அணைத்தே வைத்திருப்பேன்... அரசல் புரசலாக அசின் என்னோட எண் கேட்டு வைத்திருப்பதாக செய்தி,... )
*****************************
ஹா.....ஹா....ஹா...
Anonymous said…
ஹேமா கூறியது...
ஆதவா,இனிய காதலர்தின வாழ்த்துக்கள்."வீட்ல ஆளுங்க".அதனால பின்னூட்டம் இப்போ இல்ல.இன்னும் வாசிக்கல.
****************************
என்ன ஹேமா உங்க வீட்டிலை 'ஆளுங்க' எல்லம் இருக்காங்களா?????????
ஆதவா said…
மாதவராஜ் கூறியது...
ஆதவா!
கலையிலேயே இதற்கு ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேனே... என்னாச்சு?

அது வேற இடத்தில நீங்க தெரியாம போட்டுட்டீங்க.....  அநேகமா ரெண்டு விண்டோ ஓபன் பண்ணி வெச்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன்.... :)
ஆதவா said…
அபுஅஃப்ஸர் கூறியது...
//ஆங்,.. எதுக்கு தண்டத்துக்கு ஆபீஸ் போன் இருக்கு? அதுல இருந்து பண்ணுவோம். பில்லு நாமளா கட்டப் போறோம்?
//

நீங்களும் அப்படிதானா? ஃபோன் பேசுவதற்கு மட்டும் ஆஃபீஸ் போறீகனு கேள்விப்பட்டேன்

ஆஹா.... ஒரு குரூப்பாத்தான்யா இருக்காய்ங்க....... அபு சார்... என்னோட ஆஃபீஸ்ல போன் உண்டு.... ஆனால் நோ பர்ஸ்னல் யூஸ்.......

வாழ்த்துக்கள், எழுத்தோட்டம் ரொம்ப நல்லாயிருக்கு

நன்றி தல..  திரில் எல்லாம் மாத்தி காதலர் தினத்தில திட்டு வாங்கக் கூடாதேன்னும் சுகமா சுபம் போட்டுட்டேன்......
ஆதவா said…
ஹேமா கூறியது...
ஆதவா,இனிய காதலர்தின வாழ்த்துக்கள்."வீட்ல ஆளுங்க".அதனால பின்னூட்டம் இப்போ இல்ல.இன்னும்
வாசிக்கல.

வாழ்த்துக்கள் சகோதரி,..  உங்க "வீட்டு ஆளுங்கல" கேட்டதா சொல்லுங்க.... டபுள் வாழ்த்துக்கள் :)

மெதுவா வாசிச்சு பின்னூட்டம் போடுங்கோ!!!!
ஆதவா said…
கவின் கூறியது...

உள்ளூர்லயே நான் எவளயும் பார்க்கமாட்டேன். ***************************
இதை நாங்க நம்பனும்....


நம்புங்க..... நம்புங்க..... நம்புங்க.......

நான் ரொம்ப நல்லவன்ங்க.......

//நன்றி கவின்..//
//கரெக்டா ஒரு நிமிசத்துக்கு மேல பொண்ணுங்க கூப்புடுவாங்கங்கீறிங்க??//
வாய்ப்பே இல்லை, ஒரு நிமிஷம் அதிகம் தான்
//
இன்னொருதடவ பல்லு தேச்சு, வாய் கொப்பளிச்சு, மேக்கப் போட்டுகிட்டு
//
நீங்க ரெம்ப நல்லவரு
// நமக்கு வாழ்க்கையில எல்லாமே ஏமாற்றம் தானே!!!!
//

எனக்கும் தான்
// அரசல் புரசலாக அசின் என்னோட எண் கேட்டு வைத்திருப்பதாக செய்தி//
அசின் போன் பண்ணினா, நானும் கேட்டேன் ன்னு சொல்லுங்க
//பொருத்தமான கலரா? அய்யய்யோ! மனசு பக் பக் னு அடிக்குதே!//

பில்டப்பெல்லாம் நல்லாருந்துச்சு. முடிச்சிருக்கற விதமும் அருமை...ரொம்ப காமெடியா எழுதிருக்கீங்க.

:)
ஆதவா said…
நன்றி நசரேயன்.... அசின் கூப்பிட்டப்போ, நான் ரொம்ப பிஸியா இருந்ததாலே கட் பண்ணீட்டேன்,........ ஹஹ ஹி
ஆதவா said…
நன்றி கைப்புள்ள....



கட்டத்துரையை கேட்டதா சொல்லுங்க./
ஜியா said…
இந்த பயபுள்ளைங்க எப்பையுமே இப்படித்தான் பாஸு... ஒருத்தன் சிக்கிட்டான்னா அடிச்சிக்கிட்டேத்தான் இருப்பாய்ங்க... இதெல்லாம் சகசம் தானே?? ;))
ஆதவா said…
ஜி!!!!

சிக்கினது நீங்கதானே!!!!????

ஹிஹி
கலக்கல் தான்...கடைசியிலை கவிழ்துப் புட்டீங்களே மாப்பு......
உங்கள் நம்பரை ஸ்ரேயா கேட்டதாகவும் கேள்வி??
ஏதோ குடுத்து வைச்ச பசங்கள் நீக்கள்???? சொல்லவேயில்லை ஆதவா????
யோ தாங்க முடியல்லை சாமியோவ்.... கோவைத் தமிழ் அப்படியே பொங்கி வழியுது...படம் பிடித்த விதம் அருமை.
ஹேமா said…
//" ஹலோ, ஈஸ் திஸ் சூர்யா?"//

நான் கண்டுபிடிச்சிட்டேன்.ஆதவாக்கு ஒரிஜினல் பேரு "சூர்யா".

//அய்யோ ஒருவேளை HDFC Bank ல இருந்து பேசறாங்களோ என்னவோ? சேசே இருக்காது.. நீங்க நல்லா இருக்கீங்கலான்னு பேங்கில இருந்து யாராவது கேப்பாங்களா? //

ஆதாவா,Bank ல நிறைய கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டாம சுத்திட்டீங்களோ!
ஹேமா said…
//கரெக்டா ஒரு நிமிசத்துக்கு மேல பொண்ணுங்க கூப்புடுவாங்கங்கீறிங்க?? அதுக்கப்பறம் நாம தானே கூப்பிட்டு காச போனுக்கே கொட்டனும்,,,?//

ஆதவா,ரொம்பத்தான் பொண்ணுங்களைக் கிண்டல் பண்னியிருக்கீங்க.14 ம்திகதி பதிவு போட்டிருக்கு.ஒரு பொண்ணுங்களும் உங்களைக் கவனிக்கலையா?விட்டு வச்சிருக்காங்களா!நாங்களும் காசு போட்டு போன் பேசுவோம்ல.

உங்களை மாதிரி ஒண்ணுமேயில்லாம உங்க Friends பண்ணிண போனை நம்பி,காசு செலவு பண்ணி பொக்கையும் வாங்கிட்டு ஏமாந்துபோய் முகத்தில வளிய வளிய நிப்பமா நாங்கல்லாம்.
ஹேமா said…
ஆதவா,கமலுக்கும் கவினுக்கும்,நசரேயனுக்கும் அபுஅஃப்ஸர்க்கும்,புதியவனுக்கும்
ரொம்ப வயித்தெரிச்சல்.தண்ணி அள்ளி ஊத்தி அணைங்க.பாவம்.
Anonymous said…
ஹா! ஹா! அருமைப்பா அருமை!
ஆதவா said…
கமல் கூறியது...
கலக்கல் தான்...கடைசியிலை கவிழ்துப் புட்டீங்களே மாப்பு......

படிச்ச உங்களுக்கே இப்படி இருந்துச்சுன்னா, இதை அனுபவிச்ச நண்பருக்கு எப்படி இருக்கும் பாருங்க...


உங்கள் நம்பரை ஸ்ரேயா கேட்டதாகவும் கேள்வி??

ஆமாமாம்... ஆனா நான்ந்தான் பிஸி அப்படீன்னு சொல்லிட்டேன்..

(சோ!!!!! எத்தனை பேரைத்தான் நானும் சமாளிப்பேன்!!!!)


ஆதவா said…
கமல் கூறியது...
ஏதோ குடுத்து வைச்ச பசங்கள் நீக்கள்???? சொல்லவேயில்லை ஆதவா????


இதோ,,, இதோ!!! நீங்களே சொல்லிட்டீங்கள்ல..... (யாருக்கோ மூக்கு சிவக்குது!)
ஆதவா said…
ஹேமா கூறியது...
//" ஹலோ, ஈஸ் திஸ் சூர்யா?"//
நான் கண்டுபிடிச்சிட்டேன்.ஆதவாக்கு ஒரிஜினல் பேரு "சூர்யா".

கிட்டத்தட்ட வந்துட்டீங்க... ஆனா இல்ல.... ஹே ஹே!!!!


//அய்யோ ஒருவேளை HDFC Bank ல இருந்து பேசறாங்களோ என்னவோ? சேசே இருக்காது.. நீங்க நல்லா இருக்கீங்கலான்னு பேங்கில இருந்து யாராவது கேப்பாங்களா? //

ஆதாவா,Bank ல நிறைய கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டாம சுத்திட்டீங்களோ!

ஒருவகையில உண்மைதாங்க... ஒருகாலத்தில பேங்க் என்னை கொள்ளையடிச்சுது... அப்பறம் நான் அடிச்சேன்!!!!

இப்பல்லாம் பேங்கில கடனே தரமாட்டேங்கிறாய்ங்க... எல்லாம் நம்ம பசங்க பண்ணின வேலை!!!!

ஆதவா said…
ஹேமா கூறியது...
ஆதவா,கமலுக்கும் கவினுக்கும்,நசரேயனுக்கும் அபுஅஃப்ஸர்க்கும்,புதியவனுக்கும்
ரொம்ப வயித்தெரிச்சல்.தண்ணி அள்ளி ஊத்தி அணைங்க.பாவம்.



ஹா ஹா!!! இந்த பின்னூட்டத்தை அவர்கள் கவனிக்காமல் போக!!!! !!! ஹா அஹா////
ஆதவா said…
ஷீ-நிசி கூறியது...
ஹா! ஹா! அருமைப்பா அருமை!

வெல்கம் ஷீ-நிசி!!

ஏற்கனவே நீங்க படிச்சிருந்தாலும் திரும்பவும் பார்த்ததுல நன்றி தல...
Dhavappudhalvan said…
படைப்பும், பின்னுட்டங்களும் அருமை. அனைவருக்கும் வரப்போகும் அடுத்த வருட காதலர் தினத்திற்காக முன்கூட்டியே வாழ்த்துக்கள்.

தவப்புதல்வன்.