படிக்காதவன் - விமர்சனம்

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பல படங்களின் கலவை படிக்காதவன்.. பல காட்சிகள், ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பல படங்களைக் காட்டியது. அட, சில வசனங்கள் கூட அப்படித்தான்..

படம் அரசியல் கொலையில் தான் ஆரம்பிக்கிறது.. காமிராக்கள் உருண்டோட, வீரவசனங்கள் பேசி, திரைமறைவே கொலை செய்யும் அதே அரதப்பழசான உத்தியை இப்படத்திலும் காண்பிக்கிறார்கள்.. அதுல் குல்கர்னியை கொல்ல, காதல் தண்டபானி ஆட்களை ஏவிவிடுகிறார்... அதுல் குல்கர்னியோ, எல்லாரையும் கொல்லச் சொல்ல, தனது தம்பியை நியமிக்கிறார்.. இவர் பெரிய அரசியல்வாதியாக மாறப்போகிறாராம்.. அதனால் கொலை செய்யமாட்டாராம்... நல்ல ரவுடிக் கொள்கை. அவரது தம்பியோ, எல்லோரையும் கொலை செய்துவிட்டு, தானும் கொலைபட்டு வந்து நிற்கிறார்... சேசே.. படுத்துக் கிடக்கிறார். இப்படியாக ரவுடி சாம்ராஜ்ஜியக் கதைதானோ என்று நினைத்தால்ல்... அதுவும் இல்லை..

தனுஷ் அறிமுகம்.. பெரிய வீடு, பிரதாப் போத்தன் தான் அப்பா... வேலைவெட்டி இருக்கிறதோ இல்லையோ, வத வதவென்று பிள்ளைகளைப் பெத்துப் போட்டிருக்கிறார்.. இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை.. ஆகமொத்தம் தனுஷோடு சேர்த்து, ஐந்து பேர்.. (ஒண்ணுரெண்டு விட்டிருந்தா மன்னிச்சுக்கோங்க) தனுஷைத் தவிர, மற்ற எல்லாரும் படித்தவர்கள்... தனுஷ் படிக்காதவன்... அதான் படத்துக்குப் பேரே!!! இவர் படிக்காதவர் என்பதால் அப்பா திட்டுகிறார்.... எனக்கென்னவோ பிரதாப்பைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது... நன்கு அழ்ழ்ழ்ழுத்தமாக பேசி, தன்னைப் பைத்தியக்காரன் போன்றே சித்தரித்துக் கொள்கிறார்.

படிக்காத பசங்கள் எப்படி இருப்பார்கள்... நான்கு படிக்காத நண்பர்கள், அதே டீக்கடை, இல்லாட்டி மெக்கானிக் ஷாப், ஓசி டீ, கதாநாயகன் காசு, கேரம்போர்டு, இத்யாதி இத்யாதி... இந்த படத்திலும் எல்லாம் உண்டு..

தனுஷும் அநியாயத்திற்கு படிக்காதவனாக இருக்கிறார்... பத்தாம் கிளாஸ் பத்துமுறை எழுதியவராம்... தண்டியை, கிண்டி என்று படிப்பவராம், அப்படி இப்படி, என்று சுத்தமாகவே படிக்காதவனாக வலம் வருகிறார்.. எல்லா காட்சிகளும் கலகல..

வராத படிப்ப வரும் வரும்னா எப்படி வரும் என்று சொல்லும்பொழுதும், அப்பா, அவன் இருக்கணும் இல்லாட்டி நான் இருக்கணும் என்று பொறிந்து தள்ளும்பொழுது, தனுஷ், அம்மாவிடம், "அப்பாவையை வீட்டு விட்டு போகச்சொல்லும்மா" என்று சொல்லும்பொழுதும், பெண் பார்க்கப் போகுமிடத்தில் குண்டு ஆர்த்தி ஐலவ்யூ என்று சொல்லும்பொழுது நெகிழ்ந்து பார்க்கும்பொழுதும் தனுஷுடைய முகபாவனைகள் மிக அருமை. சண்டைக்காட்சிகளைத் தவிர்த்து, தனுஷுடையை அருமையான நடிப்பை கண்டு ரசிக்கலாம்..

அட,... இன்னும் ஹீரோயின் வரலையேப்பா..

பேருக்குப் பின்னால் டிகிரி வரவேண்டும் என்று நண்பர் பட்டாளம் யோசிக்க, ஒரு ஐடியா கிடைக்கிறது.. நல்ல படித்த பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரும் அதற்குப் பின்னால் டிகிரியும் வந்துவிடும்,.. ஆக படிக்காமலேயே டிகிரி வாங்கிவிடலாம் என்று (மிக) அருமையான யோசனை சொல்லுகிறார்கள்... அந்த யோசனை நன்றாக இருக்குமோ என்று பெண்கள் கல்லூரிகளுக்கெல்லாம் அலைகிறார் தனுஷ்... எதிர்பாராத நேரத்தில் நடிகை தமன்னா தனுஷிடம் லிஃப்ட் கேட்க..... தனுஷும் நெகிழ்கிறார்..

நடிகை தமன்னாவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. கேடி யில் வில்லத்தனமான நடிப்பையும், கல்லூரியில் யதார்த்த நடிப்பையும் வெளியிட்டிருந்த தமன்னா, அடுத்தடுத்த படங்கள் தமிழில் இல்லாமல் தெலுகில் முன்னணி நடிகையாக ஜொலித்துவந்தார்... அழகான பாவனைகள் நெளியும் வட்டமுகம், கவிதை பேசும் உதடுகள், நடித்துக் காட்டும் கண்கள் என்று இளமைப் பாட்டாளத்தின் குதூகலத்தை மொத்தமாக அடக்கி வைத்திருக்கிறார்.. நல்ல எதிர்காலம் உண்டு.

தமன்னா பின்னாடியே தனுஷ் சுற்றுகிறார்... அத்தனை காட்சிகளும் ரசிக்கத்தக்கனவாக உள்ளது... ஒரு கட்டத்தில், தனுஷை ஆள்வைத்து ரெண்டு தட்டு தட்ட, தனுஷிடமே போன் செய்து சொல்வதும் தியேட்டரே அதிரும் காட்சி... பின்னர் வில்லன்களின் முயற்சியால் (?) தனுஷ் தமன்னா காதல் உறுதியாகிவிடுகிறது.

தனுஷைக் கொல்ல அங்கங்கே ஆட்கள் கத்தி கடப்பாரையோடு அலைகிறார்கள்... காஃபி ஷாப், பரங்கி மலை என்று.... பிறகுதான் தெரிகிறது, அது தனுஷைக் கொல்ல வந்த ஆட்கள் இல்லை, தமன்னாவைக் கொல்லவந்தவர்கள் என்று....

தமன்னாவின் அப்பா சுமன்... இடைவேளைக்குப் பிறகு எண்ட்ரி.. பெரிய தாதாவாம்... ஹெலிகாப்டரில் வந்து சுடுவாராம்.. கீழே நின்று கொண்டிருக்கும் தன் மகள், தான் சுடும்பொழுது ஏதாவது ஆகிவிடுமோ என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் சுடுகிறார்... எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி.... தமன்னாவைக் கொல்லவந்த கும்பல், ஷாயாஜி ஷிண்டேவின் ரவுடிக் கும்பல்....

ஆங் நீங்கள் நினைப்பது சரிதான்.. ஷாயாஜிக்கும், சுமனுக்கு பகை... தமன்னாவைக் காதலிப்பதாக சொன்ன ஷாயாஜியின் மகனை சுமன் கொன்றுவிட, ஷாயாஜியோ தமன்னாவைப் போட்டுத்தள்ள ஆந்திராவிலிருந்து சென்னை வருகிறார்..... இந்த கதையை எங்கேயோ பார்த்தமாதிரி இல்லை??? சுமன் தமன்னாவைக் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்லுகிறார்... தனுஷ் பின் தொடருகிறார்....

இடைவேளை.

அப்பாடா.... படம் முடிந்தது.... ஆமாம்... உண்மையிலேயே!!! இடைவேளைக்குப் பின் படம் ஒருவித சலிப்பாகவே செல்கிறது. விவேக் எண்ட்ரியும் அதைவிட சலிப்பு... விவேக்கும் தனுஷும் ஆந்திரா செல்கிறார்கள்... விவேக் ஆந்திராவில் ஒரு போலி தாதாவாக முயல, அதை வைத்து தமன்னாவை சந்திக்க தனுஷ் முற்படுகிறார்... தமன்னா, தனுஷ் சந்திப்புக்காக, பெண் கெட்டப் பெல்லாம் போடுகிறார்... விவேக்கின் காமெடி அந்த இடத்தில் மட்டுமே சிரிக்கவைக்கிறது... நடிகையோடு ஒரு கும்பலே பாதுகாப்புக்காக கோவில் குளமெல்லாம் சுற்றுகிறார்கள்.

ஆந்திர கோவில் திருவிழாவில் ஷாயாஜி கும்பல், வெடி வைத்து தாக்க, எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போகும் சுமன், தமன்னாவை கைவிட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க, தமன்னாவை வெட்டி சாய்க்க வரும் ஆட்களிடமிருந்து தனுஷ் காப்பாற்றுகிறார்.. (சரவணா!!! சரவணா!!) ஆஹா ஓஹோ என்று சுமன், தனுஷை பாராட்ட, தனுஷோ, உங்க பொண்ணை எனக்குக் கட்டிக் கொடுங்க என்று துணிச்சலாகச் சொல்லுகிறார்....

தமன்னாவும் தனுஷும் காதலிக்கும் விபரமறிந்த சுமன், ஆத்திரப்படாமல், தன் மகளுக்கு புத்திமதி சொல்லுகிறார்... படத்திலேயே உறுப்படியான சீன் இது. அப்படியும் இப்படியுமாக சுமனும் ஓகே சொல்லிவிட, தமன்னா தனுஷ் காதலுக்கு இப்போது யாருக்கும் குறுக்கே இல்லாத நிலையில்...

தனுஷை கொல்ல ஆட்கள் ஏவிவிடுகிறார் சுமன்... ஆனால் உண்மையிலேயே சுமன் தனுஷைக் கொல்ல நினைக்கவில்லை...
அதுல் குல்கர்னி தன் தம்பியின் சாவுக்கு தனுஷ்தான் காரணம் என்று அறிகிறார்... ஆனால் உந்த விஷயம் தனுஷுக்கே கடைசியில்தான் தெரியும்.. சுமனுக்கும், தனுஷ்தான் அதுல்குல்கர்னியின் டார்கெட் என்று பிறகுதான் தெரியும்..

அதுல் குல்கர்னி Vs தனுஷ்... சண்டை.... அடிக்க அடிக்க வீழும் தனுஷ், பின்னர் எழுந்து சுதாகரித்து வில்லனை அடித்து உதைத்து ஜெயிக்கிறார்...

முடிந்தது கதை...

படத்தில் ஒரு போலிஸ் கூட இல்லை... அநியாயத்திற்கு இருக்கிறது.. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது மாதிரி, தனுஷ் செய்யும் கொலைக்கு, அட்லீஸ்ட் விசாரணை என்ற பெயரிலாவது போலிஸைக் கண்ணில் காண்பித்திருக்கலாம்.

பாடல்காட்சிகளைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவேண்டுமே... சில பாடல்கள் நேராக வெளிநாடு.... சில பாடல்கள் செட்டிங்க்ஸ்... அந்த செட்டிங்க் அமைத்து காட்சிபெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்.. அருமையான பேக்ரவுண்ட்.. அதற்கு ஏற்ப காஸ்ட்யூம்ஸ்... கேமரா துள்ளி விளையாடுகிறது...

ராங்கி ரங்கமா,,லூஸு லூஸு, அப்பா அம்மா விளையாட்டு, போன்ற பாடல்கள் டாப்... தமன்னாவின் இளமை பொங்குகிறது.. நல்ல நெளிவு சுளிவுகளோடு இடுப்பை வளைத்து நெளித்து ஆடுகிறார்.. தனுஷுக்கு ஏற்ற ஜோடிதான்.. விளம்பரங்களிஅலேயே தமிழ்மக்களைக் கொள்ளை கொண்ட அந்த அழகுச் சிலை.. இனி வரும் ஆண்டுகளில் ரசிகர்கள் மனதில் ஆழ இடம் பிடிப்பார் என்பது இந்த படத்திலேயே தெரிகிறது. தமன்னா வரும் காட்சிகள் எல்லாமே ஒரு படிக்(ஆதவன்) அவை தவிர மற்றயவை... பிடிக்(ஆதவன்)

எதிர்பாராத காட்சிகள், தமன்னாவின் அழகு, பாடல் காட்சிகள், இடைவேளைக்கு முந்தைய ரசனையான கலகலப்பான காட்சிகள் ஆகியவற்றுக்காக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம்....

Comments

Anonymous said…
ஐயா சாமி..
இந்த மொக்க படத்துக்கு இவ்வளவு பெரிய விமர்சனம் தேவையா..
என்றாலும்.. நல்லா எழுதி இருக்கீங்க..
வாழ்த்துக்கள் நண்பரே.,
வாழ்த்துக்கள் நண்பரே.,
வாழ்த்துக்கள் நண்பரே.,
வாழ்த்துக்கள் நண்பரே.,
வாழ்த்துக்கள் நண்பரே.,