குளுகுளூ ஜொளுஜொளு பயணம்

கோடை வெப்பத்தின் உக்கிரம் பாறையைப் பிளக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க திடீரென
உதித்த யோசனைதான் ஊட்டி பயணம்... சென்ற சனி இரவு அலுவல் வேலைகளை முடித்துவிட்டு மன்றத்தில் விடுப்பு
சொல்லிவிட்டு கிளம்பினேன்... நண்பர்கள் சிலர் மீன் கடையில் இருக்கவும், உடனே இரு மீன்களை உள்ளே தள்ளிவிட்டு
பயணத்திற்கு யாரார் வருகிறார்கள் என்று அலைபேசியில் கேட்க, சிலர் குறைந்து இறுதியில் நான்கு பேர் மட்டும் என்று
குறுகிப் போனது.. சரி என்று ஞாயிறு அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து (வேதனையான தருணங்கள்) பல்லு விளக்கு
குளித்து முடித்து 5.45 க்கு நண்பர்கள் நால்வரும் ஒன்றிணைந்தோம்.


நண்பர்கள் நாங்கள் யார் யார் எப்படி என்று சொல்கிறேன் ..

நான் ஆதவன் - என்னைப் பற்றி சொல்லவேண்டியதில்லை PJP நான்.
Hell - சிறுவயது முதல் நெருங்கிய நண்பன்... ஒரே வளவள... ஏன் இந்த பெயர் அவனுக்கு என்று தெரிந்ததா?
Be or Scooby - சிறுவயது நண்பன். சென்னையில் இன்னும் படித்துக் கொண்டு அவனோட வேலையான லவ்விக்
கொண்டிருக்கிறான்
Rocky - என்னுடைய வேலை.... இவனுக்கு கவிதை, கதை போன்றவற்றில் விருப்பம்.. விரைவில் மன்றத்திற்கு வருவான்..
அப்போது இன்னும் தெரிந்துகொள்வீர்கள்.

நால்வரில் கடைசி மனிதரைத்தவிர மற்ற மூவரும் PJP. நாலாமவன் ரொம்ப நல்ல பையன் (?!)

ஒருவழியாக வண்டியை முறுக்கிக் கொண்டு கிளம்பினோம். நன்றாக ஞாயம் பேசிக்கொண்டே..... அந்த நேரத்திலேயே
நல்ல வெளிச்சம் இருந்தது. அவினாசி அருகே இரண்டு வண்டிக்கும் பெட்ரோல் ஐந்து லிட்டர்கள் அடித்துவிட்டு
கிளம்பினோம்.... ஒரே மூச்சில் முக்கால் மணிநேரத்தில் பிளாக் தண்டர் வந்து சேர்ந்தாயிற்று. (ஏற்கனவே இங்கு வந்து
அடித்த கூத்துக்கள் எனக்கே மறந்துவிட்டது..) அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிதுநேர
இளைப்பாறலுக்குப் பிறகு வண்டியை உசுப்பி ஊட்டி மலையில் ஏற ஆரம்பித்தோம்... நாங்கள் சென்ற நாள்
மலர்கண்காட்சிக்குண்டான நாளாகியமையால் சரியான கூட்டம்... ஊட்டியில் சுற்றுலா பயணிகள் மட்டுமே 2 லட்சம்
பேராம்.... பின் எப்படி மலைப்பாதையில் வேகமாக செல்லமுடியும்..?? ஒரே ட்ராஃபிக்... கிட்டத்தட்ட இரண்டு
மணிநேரங்கள் பிடித்தது.. குன்னூரைத் தொட... அப்படியே மலை அழகுகளை சில இடங்களில் ரசித்துவிட்டு குன்னூர்
தாண்டி ஊட்டியைத் தொட, மணி 10 ஐ நெருங்கியது... ஞாயிறு அன்று ஏக கூட்டம்... சுள்ளென இல்லாவிடினும் ஓரளவும்
வெயில். ஊட்டி டீ அருந்திவிட்டு திட்டம் போட்டோம்... முதலில் பைகாரா நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு பிறகு
பொடானிகல் கார்டன் முடித்துவிட்டு சீக்கிரமே வீடு திரும்பிவிடவேண்டும் என்பது... அடுத்தநாள் வரை நாங்கள் திட்டம்
போடவில்லை.. ஊட்டியிலிருந்து பைகாரா கூடலூர் செல்லும் வழியில் இருக்கிறது. கிட்டத்தட்ட 20 கி.மீ மேலே.. மலை என்பதால் இயற்கையின் அழகு அற்புதமாக இருந்தாலும் பாதை மிக மோசமாக இருந்தது.. வெறும் கற்களே தாருக்கு மேலே இருந்தன.. வண்டியை ஓட்டிக் கொண்டு போவதில் மிகச் சிரமமாக இருந்தது. சிலசில இடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு மிக மெதுவாக அழகை ரசித்துவிட்டு பைகாரா சேர்ந்தோம்...

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு பைகாரா படகு இல்லத்திற்கு வந்து பார்வையிட்டோம்... அங்கங்கே சில படங்கள் எடுத்துவிட்டு சில பெண்டுகளை ரசித்து ஜொல்லிவிட்டு நேரே நீர்வீழ்ச்சிக்குச் சென்றால், அங்கே வறண்டு போயிருந்தது. இருந்தாலும் விடுவதாக இல்லை. அதையும் படம் பிடித்துவிட்டோம்... அங்கே ஜொல்லமுடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது... ஒரு பக்கம் இயற்கை அழகு வறண்டு போயிருந்தாலும் இன்னொருபக்கம் இயற்கையாகவே அழகிகளின் அழகு ஊறிக் கொண்டிருந்தது... பாதிக்கும் மேற்பட்டவர்கள் வடநாட்டவர்கள். சில வெளிநாட்டவர்களும் கூட.... மறக்க முடியாத தருணங்கள். செய்த கூத்துக்களை நான் வெளியிடவும் மாட்டேன்

இப்படியாக மதியம் சென்றுவிட்டது. அப்படியே நடந்துவந்து பஜ்ஜி சொஜ்ஜிகளைத் தின்றுவிட்டு கிளம்பினோம்... நேரே ஷூட்டிங் ஸ்பாட்... ஊட்டிக்கும் பைகாராவுக்கும் நடுவே இருக்கிறது.. மிக அழகிய பசுமை பிரதேசம். அங்கே கண்ட காட்சிகளை நான் சொல்லவா ? ஜொல்லவா? மதியம் 3 வரை தத்தளித்துவிட்டு பல படங்களை பல கோணங்களில் எடுத்துவிட்டு மீண்டும் வண்டியேறினோம்... இடையிடையே தின்றதையெல்லாம் சொல்லமுடியாது... கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தின்று தீர்த்தோம்...

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் ஏரி ஒன்று இருந்தது... மரங்களுக்கு ஊடான பாதையில் நடந்து சென்று ஏரியைக் காணும்போது.. அடட்டா!!!! என்னே அழகு!!!! அங்கேயும் சில படங்களை எடுத்துத் தள்ளிவிட்டு வண்டியில் கிளம்பினால், ஊட்டிக்கு 8 கி.மி இருக்கையில் மழை பின்னி எடுத்தது.... மணி கிட்டத்தட்ட 4 ஆகிவிட்டது. சீக்கிரமே பொடானிகல் கார்டன் ரசித்துவிட்டு வீடு திரும்பவேண்டும். மலைப்பாதை என்பதால் 7 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மழை பின்னி எடுத்தது. கிட்டத்தட்ட 5 மணி வரை..... என்ன செய்ய???

யோசித்துக் கொண்டிருந்தோம்... காரணம் அன்று சீசன் காலம் என்பதால் அறை வாடகைக்குக் கிடைக்காது. இரவுக்குள் வீடு திரும்பவேண்டும்... வீட்டுக்கு கிட்டத்தட்ட 100 கி.மி இருப்பதாலும் மலைப்பாதையே 40 கி.மி என்பதாலும் பல சிக்கல்... மாட்டிக் கொண்டோம்..... இந்த சூழ்நிலையில் ஊட்டியை இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை....
---------------------------------
சரி இது இப்படியே இருக்கட்டும்.. வரும் வழி முதல் இதுவரை செய்த லூட்டிகள் என்ன?? நிச்சயமாக அசிங்கமாக ஏதும்
செய்யவில்லை. ஊட்டிக்கு ஏறும் வரை எங்களது வழக்கமான பேச்சுக்கள் மட்டுமே இருந்தன. அங்கே சேர்ந்ததும்
நாங்கள் மாறிவிட்டோம். எங்கள் கண்கள் எங்களிடமே இல்லை.. பைகாரா செல்லும் வரை நாங்கள் நல்லவர்களாக
இருந்தோம்.. பைகாரா அடைவதற்கு முன்பாக ஒரு கேரட் விற்கும் பெண்மணி எங்களை அழைத்து கேரட் வாங்கச்
சொன்னார். நாங்கள் கொஞ்சம் தூரம் சென்று நிறுத்தினோம்... அவசரம் வேறு.. அந்த பெண் ஓடிவந்து கேரட்டுகளை
எங்களுக்கு விற்றுச் சென்றாள்... ஹி ஹி. அந்த பெண்மணி மிக அழகாக இருந்தாள். ஆனால் கை மட்டும் சூம்பிப் போய்
ஆகாரம் திங்காத கோழிமாதிரி இருந்தாள்... மற்றபடி அவளுக்கு பெரிய மனசு.. இல்லாவிடில் எங்களுக்காக சுவை
மிகுந்த கேரட் வழங்க ஓடி வந்திருக்கமாட்டாள்.. சரி சரி. ரொம்ப ஓவரா போறேன். பைகாரா அடைந்ததும் வாலிபம்
வேலை செய்ய ஆரம்பித்தது. எங்கு திரும்பினாலும் கண்கள் பெண்களிடமே நின்றது. படகு இல்லத்தில் ஏகப்பட்ட
இளசுகள்.. கையில் பாப்கார்ன், மாங்காய், ஐஸ்கிரீம் என்று இஷ்டத்திற்கு செலவு செய்துகொண்டு
திரிந்துகொண்டிருந்தார்கள் சரி எதற்கு மொபைல் வைத்திருக்கிறோம்? படமெடுக்கலாம் என்று பார்த்தால் மொபைல்
குறிப்பிட்ட தொலைவு வரை ஜூம் ஆகவில்லை. படகு இல்லத்தில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருக்கும்
காதலர்கள் முதல் தம்பதியவர் வரை ஒருவரையும் விடவில்லை. இதில் உச்சகட்டமாக ஒரு தம்பதியரின் கொஞ்சலை
படமெடுத்து சாதனை புரிந்தோம்... ம்ம்... மனைவியோடு இம்மாதிரி இடங்களுக்கு வந்தால் அது அலாதி சுகம்.. நமக்கு
இன்னும் காலம் இருக்கிறது ... அந்த படகு இல்லத்தில் பயணம் செய்ய நாங்கள் திட்டமிடவில்லை... ஊட்டியில் சென்று
பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தோம்.. சில ஊடல்களையும் அங்கே காணமுடிந்தது.

அப்படியே பைகாரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் ஒரே அழகிகளின் அணிவகுப்பு. எங்களுக்கு திக் திக் என்று இருந்தது.
(ஒரு போலீஸ் காரியைக் கூட விடாமல் ஜொல்லினோம். ) வெளிநாட்டவர்கள் வேறு வந்திருந்தார்கள்... சிலதுகள்
பஞ்ச உடை.... நாங்கள் எங்களையே படமெடுக்கிறோம் பேர்வழி என்று சிலரை படமெடுக்க முயன்றோம்... ஆனால்
முடியவில்லை.. எங்களுக்குண்டான நாகரீகமே தடுத்துவிட்டது. அங்கே சிறிது நேரம் அமர்ந்து இயற்கையை
ரசித்தோம்.. கூடவே பலவும்.. மெல்ல கடைக்குச் சென்று வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி என்று
ஒரு ஐயிட்டம் விடாமல் துரத்தித் துரத்தித் தின்றோம். ஒரு பெண் அருகே அமர்ந்திருக்கிறாள் என்பதற்காகவே ஒரு
மினரல் வாட்டரை வாங்கி அதில் முகம் கழுவி நாங்கள் அதிசுத்தமானவர்கள் என்று உணரவைத்தோம்...ம்ம்ம்ம்ம் அந்த
பெண் எங்களைப் பார்ப்பதாகத் தெரியவில்லை. மெல்ல நடந்து வந்து அந்த போலீஸ் காரியை மீண்டும் ரசித்துவிட்டு
பைகாராவிலிருந்து இறங்கினோம்... ஹி ஹி மீண்டும் அதே கேரட் வாங்கலாம் என்று நினைத்தோம்... எங்கள் நினைவில்
யாரோ மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள். அட குரங்குகளைக் கூட விடவில்லை. பல சேஷ்டைகள் செய்துவிட்டு
நேரே ஷூட்டிங் ஸ்பாட் இறங்கினால், அங்கே ஆரம்பமே அமர்களம்.

நாம் ரசிப்பதற்காகத்தான் பெண்கள் மேக்கப் செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து... வெறும் ரசிப்போடு இருப்பது
ஒன்றுதான் சாலச் சிறந்தது. அளவுக்கு மீறிய ரசிப்புத் தன்மை என்னிடம் விட்டு விலகியிருந்தது நான்
அறிந்துகொண்டேன். இதில் கொடுமை என்னவென்றால் பல பெண்கள் எங்களையும் ரசித்தார்கள். ஊட்டியில் சேலை
கட்டிய பெண்களை நான் பார்த்தது மிக மிக குறைவு.. ஆனால் அதற்கு நேரெதிரே ஆடை குறைந்த பெண்களையே
பார்க்க முடிந்தது. இம்மாதிரியான இடங்களுக்கு முழு சுதந்திரம் எடுத்துக் கொண்டு இப்படி செய்கிறார்களா அல்லது
அவர்கள் வாழ்க்கை முறையே இப்படித்தானா என்று சந்தேகம் எழும்புகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வதற்கு
முன்பாகவே இரு மாங்காய்களை வாங்கி கொறித்துக் கொண்டே இருவரை பின் தொடர்ந்தோம்... ஒரே மேடாக
இருந்தமையால் என்னால் அவ்வளவாக ஏற முடியவில்லை. மெல்ல மெல்ல ஏறினால் அய்யோ... அப்படி ஒரு அழகுக்
கூட்டமாக ஊட்டி மலைகள் இருந்தன,, எல்லாவற்றையும் மொபைல் படம் பிடித்துக் கொண்டது.. நாங்கள் ஒரு ஓரமாக
நின்று/படுத்துக் கொண்டு பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் செல்ஃப் டைமர் வைத்து நாங்களே
படமெடுத்தோம்.. அது ஒரு அழகிய அனுபவம்./ அப்படியே நடந்து சென்று குதிரை ஏற்றத்தைக் கண்டு ரசித்தோம்..
ஏனோ எனக்கு குதிரை ஏறவேண்டும் என்று தோணவில்லை. அங்கே மொபை டவர் கிடைத்தது என்பதால் அவரவர்கள்
தன் உட்பிக்கு அலை(ழை)த்தார்கள்.. நான் மட்டும் இயற்கையோடு காதல் புரிந்துகொண்டிருந்தேன். உடன் ஓடி
விளையாடும் சில பெண்களையும் குழந்தைகளையும் சந்தோசமாகவும் அதேசமயம் நாம் குடும்பத்தோடு வந்திருந்தால்
இந்த சந்தோசம் மேலோங்கியிருக்கும் என்றும் வருத்தப்பட்டேன். சிலருக்கு எல்லாமே அமைந்துவிடாதல்லவா? சரி.

மெதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, அதையும் விடாமல் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள்..
அதில் என்னென்னவோ பேசினேனே!!! இறங்கும்போது யாரும் ஏறவில்லை.. அதனால் மனம் சூட்டிங் ஸ்பாட்டிலேயே
சுற்றீக் கொண்டிருந்தது. அப்படியே வண்டியை உசுப்பிவிட்டு கொஞ்ச தூரம் சென்று ஸ்கூபி வண்டியை நிறுத்தி ஏரி
ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டுவிட்டு செல்லலாம் என்றும் சொன்னான். கொஞ்சம் இறக்கமாக செல்லவேண்டும்.
அங்கிருந்த நீளமான மரங்கள் எங்களை வசீகரப்படுத்தின.. அந்த ஏரியை அடைந்ததும் ஒரு பெண்ணிடம் சொல்லி
எங்கள் நால்வரையும் படம் எடுக்கச் சொன்னோம்... அவர்கள் சிரித்துக் கொண்டே படமெடுத்தார்கள். பின்னர் பஞ்சு
மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிக் கொண்டே ஏரியிலிருந்து பாதைக்கு ஏற முற்பட்டால் சத்தியமாக முடியவே இல்லை.
இதற்கு இரு காரணங்கள் உண்டு.. ஒன்று இறங்கிவரும் பெண்கள் கூட்டம்,. அடுத்து உயரமான மேடு... நடக்க
முடியவில்லை. எப்படியோ ஏறி வண்டியில் ஊட்டிக்குச் சென்றால் பாதி தூரத்தில் மழை. வண்டியை ஓரம் கட்டிவிட்டு
மழை நின்றதும் கிளம்பினோம். இடைப்பட்ட சம்பாசணைகளை ஏற்கனவே படித்திருப்பீர்களே!!
பைகாராவிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. அந்த மலைபிரதேசங்களில் எப்போதுமே வானிலை மழை வரும்படியாகவே இருக்கும் ஆதலால் நாங்கள் மழை பிடித்ததும் ஒரு இடத்தில் ஒதுங்கிக் கொண்டோம். மழையென்றால் சாதாரண மழையல்ல. பனிக்கட்டிச் சாரல்.. ஒவ்வொருதுளியும் சுள் சுள்ளென பிடித்தது. அதோடு பனிக்கட்டி மழை பார்த்து வெகு நாட்களாகிவிட்டமையால் ரொம்ப சாலியாக இருந்தது. அருகே இருந்த டீக்கடையில் பிஸ்கோத்துகளும் டீயும் சாப்பிட்டோம்... வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான தேநீர். மழை மிகவும் வழுத்தது. அதோடு மண்வாசனையும் சேர்ந்து பனிக்கட்டிகள் தாளமிட எனக்கு மட்டும் அந்த நேரத்தில் ஒரு நோட்டும் பேனாவும் இருந்திருந்தால்........
வேறவழியில்லை... பொடானிகல் கார்டன் சுற்றிப் பார்க்க இயலாது. ஆக அடுத்தநாள் தங்கி இருந்து பார்த்துவிட்டு போக முடிவு செய்தோம். ஸ்கூபியின் மாமாவுக்கு போன் செய்து ஊட்டியில் இருக்கும் சித்தப்பாவை அறை வாடகைக்குப் பிடிக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னோம்... அதற்குண்டான ஏற்பாடும் நடந்தது.. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் மழைக்குப் பின் வண்டியை எடுத்து கிளம்பினோம்... நேரே ஊட்டி..
ஊட்டியில் பொடானிகல் கார்டன் செல்லும் வழியில் ஒரு திரையறங்கு உள்ளது. அதனருகே வண்டியை நிறுத்திவிட்டு நால்வரும் ஸ்கூபியின் சித்தப்பா வருகைக்குக் காத்திருந்தோம். அப்போதே மாங்காய்களையும் மசாலா கடலைகளையும் சோளக்கருதுகளையும் வாங்கித் தின்று வயிறு உப்பிப் போய்,,,, இடம் தேட வேண்டிய சூழ்நிலைக்கு வந்து அப்பறமாக வயிறை சுத்தம் செய்துவிட்டு வந்து நிற்பதற்குள் மணீ ஆறாகிவிட்டது. பிறகு வேறொரு இடத்திற்கு சித்தப்பா வந்து சேர்ந்தார்.. வண்டியை உசுப்பி விட்டு ஸ்கூபி ராக்கி சித்தப்பா மூவரும் ஒரு ஹோட்டலுக்குச் செல்ல நானும் ஹெல்லும் நடந்துவந்தோம்... இரு கி.மீ தாண்டி அந்த ஹோட்டல் இருந்தது. வாடகை எவ்வளவு என்று கேட்டால் ஆயிரத்தி இருநூறு என்றார்கள்... எங்களுக்கு பக் பக் என்று இருந்தது.. அவ்வளவு பணமும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஸ்கூபி அந்த பணத்தை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான். சரி என்று ஒருமனதாக ஊட்டியில் அறையில் தங்க முடிவு செய்தோம்... இதற்கிடையே கொண்டு சென்ற கேமிரா போன்களின் பேட்டரி லோ என்று காண்பித்தது... பேட்டரி சார்ஜரும் கொண்டு செல்லவில்லை. இன்னும் அறையும் பதிவு செய்யப்படவில்லை.. வேறு யாரோ அறையைக் காலி செய்ய இருப்பதாகச் சொல்லி வரவேற்பறையிலேயே தங்க வைத்தார்கள். சரி இந்த விஷயத்தைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று சரியாக 7 மணிக்கு சாப்பிட கிளம்பினோம். செல்லும் வழியிலேயே எங்களுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. கண்கள் பாதையைக் காணாமல் பேதையைக் கண்டது. ஒருவழியாக மூன்று கிமீ வரை நடந்து வந்து ஏதாவது பொருட்கள் வாங்கலாம் என்று ஒரு கடைக்குச் சென்று நாங்கள் செய்த கூத்து இன்னும் நினைவிருக்கிறது.
ஸ்கூபி பைனாகுலர் வாங்குவதாக விலை விசாரித்தான்.. 300 க்கும் மேலே விலையைச் சொல்ல, அவன் குறைக்கச் சொன்னான்.. கடைக்காரனும் வாங்குவதாக இருப்பின் நிச்சயம் குறைப்பேன் என்றும் பைனாகுலர் ஜூம் 2 கி.மீ தாண்டும் என்றான்... நான் வாங்கிப் பார்த்தேன். அது 50 அடியைக் கூட உறுப்பிடியாக ஜூம் செய்யவில்லை.. ஆதலால் 160 ரூபாய்க்குக் கேட்டான்.. கடைக்காரனும் ஒத்துக் கொண்டான்.. இருப்பினும் எங்களுக்குத் திருப்தி இல்லை.. கடைசிக்கு 1 கி.மீ ஜூமாவது ஆகவேண்டும்.. இது பக்கதிலிருக்கும் ஒரு பலகையைக் கூட ஒழுங்காக காண்பிக்கவில்லையாதலால் நாங்கள் வேண்டாம் என்று ஒதுங்க, அவனோ பெரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டான்.. நான் அமைதியாக இருந்தேன்.. ஸ்கூபி திட்ட, அவன் திட்ட, இறுதியில் நாங்களே வெளியேறினோம்.. நேரே இசைக்கச்சேரி நடந்த இடத்திற்குச் சென்றோம். மனம் நிலைகொள்ளவில்லை.. சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்ல முடிவெடுத்து திரும்புகையில் ஒரு சம்பவம்.
ஒரு ஆள் நடைபாதையில் நடந்துகொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணை இடித்துவிட்டுச் சென்றான்... எங்களுக்கோ ஒரே ஆச்சரியம். ஏனென்றால் சில பெண்களே வேண்டுமென்றே எங்களை இடித்த சம்பவம் நடந்தது அங்கேதான்.. ஆனால் அந்த ஆசாமி இடித்த முறையும் கைபட்ட இடமும் அறுவறுக்கத் தக்கவகையில் இருந்தது. அந்த பெண் மிகவும் சோகமாக இருந்தாள். அவளோட அப்பா அவனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்... அவனோ எப்படியோ தப்பி அடுத்த பெண்களை இடிப்பதற்குச் சென்றுவிட்டான்... பெண்களை ரசிக்கலாம் கமெண்ட் அடிக்கலாம்.... ஆனால் இப்படி தகாமல் புண்படும்படி நடப்பது வேதனை.. அநாகரீகம்..
இப்படியே சிறிது நேரத்தில் அதாவது 9 மணி அளவில் ஹோட்டலுக்குச் சென்றால் அறைக்கு வாடகை 1500 என்றும் அதற்கு வேறு ஆள் வந்துவிட்டார்கள் என்றும் சொல்லவே, எங்களுக்கு திக் என்று ஆகிவிட்டது.. ஊட்டியில் 9 மணிக்கு அதுவும் அந்த கடும்குளிரில் வண்டியை எடுத்து 100 கி.மி தொலைவில் உள்ள எங்கள் வீட்டுக்குச் செல்வது நடக்கக் கூடிய காரியமா? நினைக்கும்போதே நடுக்கமாக இருந்தது.. ஹோட்டலைவிட்டு வெளியே நின்றோம்... ஒருவித பயம் எங்களைத் தாக்கியது...

Comments