விதிகளை உடைக்கவா?

நொடிகள்
மழையிலழிந்த கோலமாய்
உருகிக்கொண்டிருந்தன.
காலங்கள் வழிந்துகொண்டிருந்தன.

பெருக்கெடுத்து ஓடும்
வியர்வைகள்,
முகச்சுருக்கத்தைக்
காணாமல் ஓவியமாய்த்
திகழ மறுத்தன.
குங்குமத்தைக் கலைப்போமா
என்று இல்லாத பொருளைத்
தேடி அலைந்தன.

கண்கள்
கண்டவர்களைத் தேடின.
காட்சி பிழையானது.
நெஞ்சம் பெருத்து இறங்கியது.
காற்றோ சுவைத்து மகிழ்ந்தது.

ரணம் சூழ்ந்த காலத்தை
மறந்துபோய்
மீண்டுமொரு மீண்டெழுதல்
கிட்டுமா என்று
படபடக்கிறது இமைகள்.

ஏழாவதாக கிட்டய சுவை
மீண்டும் வருமா
என்று தவிக்கிறது அதரம்.

வீணில் கழிகிறது
தேகம்
கனவுகள்
வெடிக்கிறது இரவில்..

என்ன செய்வது?
உறவுகள் சொப்பவில்லை
மறுஉறவுக்கும் ஒப்பவில்லை.

உணர்வுகளைப் புதைத்து
அதன் மீதமர்ந்திருக்கிறார்கள்.

நான் எழுந்திடவா ?
தூங்கிவிடவா ?

Comments