நான் இந்துவா? இசுலாமியனா?

வேட்கைகளின்
தொகுப்புக்களோ
கோபக் கனலின்
கொஞ்சல்களோ

என் கண்,
முன்னர்,
வெளிறித் தொங்கிய
அனலிலிருந்து
இன்று
மெளனமாய் நீண்டு
வெறியாடுகிறது
மதக் குருத்துக்கள்

சிந்திய துளிகளுல்
மதச் சூட்டு இருக்குமோ என.
சூள்கொண்டு மாய்ந்த
கண்கள் தேடியது
பார்வையை இழந்துவிட்டு.

இவ் வுலோபிகளின்
உயிர்ச் சடலங்களை
உருவாக்கிய
என்னை

யாரென்று வினவிய
வினாவினால்
குருதி தொய்ந்த
என் சிரத்திலே
சீழ்ந்து ஒழுகியதைத்
தொட்டு ருசித்தேன்
நான்
இந்துவா?
இஸ்லாமியனா?

Comments