கிழிந்துபோன கவித்தாள்கள்

மந்தைவெளிக்கு அருகே
மங்கை ஒருத்தி இருக்காளாம்.
மச்சமுள்ளவனைத் தொட்டு
பிச்சை போடுவாளாம்
வாருங்களடா செல்லுவோம்.

கையில் ஊறித் திளைக்கிறது
பெற்றவனின் வியர்வைகள்.
இன்னுமென்ன சேஷ்டைகள்?
துண்டு சிகரெட் ஒன்று எடு
எரித்துப் பார்ப்போம் குலைகளை.

காக்கிச் சீனி விற்பவன்
இருந்தால் பிடித்து
நகநுனியில் சிறைபிடி!
கிராமுக்கு மேலே
பணம் கொடுத்து
நட்சத்திரங்களைப் பிரிப்போம்.

போகும் வழியில்
பானம் இருந்தால்
கொஞ்சம் இடுக்கில் வை
அவளோடு ஊற்றிக் கொள்ள..

இன்னுமென்ன உலகில்
திளைத்துக்கொண்டு இருக்கிறது?
தேர்ந்தெடு. விதைப்போம்.

" போகும் வழியில்
கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
வாங்குவோமா?"

அது எதற்கு? போதைப் பொருள்..!!
என்னோடு வா,
கொஞ்சம் காசு, நிறைய சுகம்
காட்டுகிறேன்.

Comments