செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தம்

கோடைத் தாக்குதலில்
உதடுகள் உலர்ந்த
இலைகளை
வாரி யணைத்துக் கொண்டது
ஒரு ஆலமரம்.

பீறிட்ட ஞாபங்கள்
ஒன்று சேர
மெல்ல கிளைமேல்
படர்ந்தேன் ஒரு பாம்புபோல.

ஒரு கிளையினுள் நுழைந்த
அக்கணமே கண்டேன்.
அங்கே பல சிற்பங்கள்
செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன.
சிறு வலியோடு தண்டனைகள்
நிறைவேற்றப்படுகின்றன.
முன்பொருநாள் எனக்கும்..

"நீ யார்?
உனக்கு என்ன வேண்டும்?"
அதே அதிகாரத் தோரணையில்
கேள்வி கேட்கப்பட்டது.
என் பதிலை எதிர்பாராது
உளியை கையில் எடுத்துக்கொண்டான்
என்னையும் செதுக்கிய சிற்பி.
நான் ஞாபகங்களுடன்
வெளியேறினேன்.

அன்று
அழுத விழிகளுடன்
அதே கிளையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டதால்தான்
இன்று
அழகிய சிற்பமாய்
ஆதவனாய் நான்....

சாபமிட்ட அதே நாக்கு
வாழ்த்தவும் தயங்குகிறது.
என் செவிக்கு
பலரின் சாபங்கள் கேட்டன.
வருங்காலத்தில் அதைப் பற்றி
வருத்தப்படப் போவதறியாமல்.

Comments