பாதை மாறும் கொடிகள்.

முதன்முதலாய்
உன்னருகே நான்.
உன் போதை விழிகள்
என் உடலில் எழுதின
எனக்கான தலைவிதி.

உன் மனமெப்படியோ
அப்படியே செல்ல
என் வாழ்க்கை
பயணிக்கும் போது
இடையிடையே
இரவுத் தீண்டல்களில்
பாதை தடுமாறும்.

உனக்காக பட்டினி
கிடந்தேன் பல நாட்கள்
மனநிறைவாய் வருவாய்.
எனக்கென இருநாட்கள்கூட
உன் மனம் தாங்காது

சலித்துப் போய்
நடுநிசியில்
யாருமில்லாத வானத்தை
வெறுப்பாக பார்ப்பதும்
கொண்டாட்டமில்லா இரவுகளை
அடியோடு தொலைப்பதும்
இன்றைய சூழ்நிலையாக்கினாய்.

உன் விஷமம் அறிந்தும்
உன்னுயிரோடு ஒட்டுகிறேன்
பிளாஸ்டிக் பை நீராக...
நீ என்னோடு எழுதிய கவிதைகள்
என் அருகே உறங்குகின்றனவே!

Comments