பகுதி 9

ஆவியைக் காதலித்தாலும்
அவள் மறையும் நிமிடங்கள்
வாழ்க்கையின் ரணக்கீறல்கள்
அவளோடு வாழ்ந்த காலத்தில்
பேசிய பேச்சுக்கள் ஏராளம்/
ஒரு உயிர் அடங்கும்போது
நினைவுகள் ஏராளமாய் வந்து
கதவைத் தட்டுமல்லவா?

கண்முன் மறைகிறாள் குழலி...
அது பிறருக்குத் தெரியவில்லை.
பிடிபட்ட கதிரவன் கதறினான்..
போகாதே என்று இதயம் வெடிக்க
துடிதுடித்துப் போனான்..
காதலின் உச்சமாக அந்த உடலுக்கு
முன்னே நின்றுகொண்டு
முத்தமிட்டான் அவள் இதழ் நோக்கி.....
அச்சமயம் ஒரு அதிசயம்.....

காதல் எவ்வளவு வலிமையானது?
ஒரு முத்தத்தில் பிரிந்த காதல் உண்டு
முத்தத்தில் சேர்ந்த காதல் உண்டு..
ஆனால்
முத்தத்தாலே உயிர்வந்த காதலுண்டா?

இறந்து போன குழலி
நினைவுகளின் வலிமையால்
மீண்டும் உயிர் பெற்றாள்..
அவளின் கோமா நிலையால்
நிற்கக் கூட இல்லாத நிலை..
சுற்றி நிற்கும் காவல் கூட்டத்தையும்
மருத்துவ உடை அணிந்து நிற்கும்
மருத்துவர்களையும்
ஏனைய சந்திப்பாளர்களையும்
வித்தியாசமாக நோட்டமிட்டாள்..
அவளுக்கு எல்லாமே புதிதாகத் தோன்றியது..
அவள் நினைவுகளின் காதலன்
கதிரவன் உட்பட....

அவள் உயிர் பிழைத்த சந்தோசத்தில்
மனையே மகிழ்ச்சியில் திளைக்க,
மனம் மட்டும் சோகமாய் திரிந்தான்..

Comments