பகுதி 6

கலங்கிப்போயிருந்த
கதிரவனுக்கு
கண்களாலேயே மன்னிப்பு கேட்டாள்..
கதிரவன் தண்சுடர்..
ஒரு பெண், அதிலும்
அழகிய பெண், அதிலும்
இறந்து போன பெண், அதிலும்
கலங்கிய விழிகளோடு வந்தால்,
கல்லும் கரையாதா?

குழலியின் நண்பனாகிப் போனான்
கதிரவன்..

அவளைப் பற்றி
அக்கம் பக்கம் விசாரித்தான்...
(குழலி வசித்த வீட்டில் அல்லவா
கதிரவன் இடம் பிடித்திருக்கிறான்....)
விடைகள் இல்லை.
கூடவே அவளும் வந்தாள்..
கதிரவன் கண்களுக்கு மட்டும்
தெரியும் வண்ணம்........

குழலியின் நண்பியான
தேன்மொழி இல்லத்தை
இறந்த காரணத்தினால்
மறந்து போனாள்.
சற்று விசாரிக்கையில்
தெரிந்து கொண்டார்கள் இல்லத்தை...
ஆனால் அங்கே அவளில்லை..
அதற்கு எதிரே அவள்
குடி மாறியதைப் பாராமல்
மெளனமாக கலைந்து சென்றார்கள்
ஆவியும் பாவியும்....

மெல்ல நாட்கள் கரைந்தன,
ஆதவனின் ஒவ்வொரு எழுச்சியிலும்
நாட்கள் நகர்ந்து கொண்டு
இறுதியில் இறந்துபோக வேண்டும்..
எழுச்சி மட்டும்
என்றும் வீழ்ச்சி இல்லை.

ஓர் நாள்...
கதிரவன் கைபிடித்து (?)
நகர் வலம் வந்தாள் பூங்குழலி..
பூங்காவில் விளையாடும் சிறு குழந்தைகள்
சர்க்கஸில் சறுக்கும் பிஞ்சுகள்
அதனை ஆவலோடு பார்க்கும்
மற்றைய பிள்ளைகளுக்கு மத்தியில்
முக மலர்ச்சியாக
பூங்காவின் வழி
ஒரு ஓட்டலுக்குள் சென்றார்கள்,,
அங்கே அச்சமயம்.....

Comments