பகுதி 5

அவள் மேஜைக்கு
இடையில் நின்று கொண்டிருந்தாள்.
அவளின் இடை
மேஜைக்கு மேலும்
கால்கள் கீழும்
இருந்தன....
விந்தை...
அவள் இறந்துபோனவள்.
அவள் ஒரு ஆவி...
அது அவளுக்கு விளங்கவில்லை...

சிறிது நாட்கள் நகர்ந்தது,.
அவள் அவனோடே வசித்தலானாள்
அவனின் செயல்களுக்கு
இடைமறித்தாள்...
நன்றாக படியுங்கள்
இடைமறித்தாள்.

தொல்லை காட்சி பார்க்கையில்
தொல்லை கொடுப்பாள்
பாட்டு என்ற பெயரில்
அறை அதிர அலறுவாள்
அழகிய முகம்தான்
அவளுக்கு என்றாளும்
அவதியுறும் செயலால்
அழுகிய முகமாய் தெரியலானாள்
அவனுக்கு...

முடிவு செய்தான்...

சாமியார்களை வரவைத்தான்..
பேயோட்டும் சாமியார்கள்- வெறும்
நாயோட்டும் சாமியார்கள்
அவளுக்கு அருகிலே இருந்தும்
ஓடல் நடைபெறவில்லை.
அவளும் ஓட்டமெடுக்கவில்லை.
மாறாக,
ஏளனமாக பார்வையிட்டாள் குழலி...
பேயோட்டுபவனுக்கு குழலி தெரியவில்லை..
ஆம்... கதிரவன் கண்களுக்கு மட்டுமே
விருந்தாக வந்திருக்கிறாள்.
மற்ற சுடர்களுக்கு வெறும் காற்றுதான்..
அற்புதம் என்பதா இதை?

ஆவியிடம் பேசுபவர்கள்,
சூனியம் செய்பவர்கள்
சாமியார்கள்
இன்னபிற இத்யாதிகள்
எல்லோரையும் வரவைத்து
ஓட்டப் பார்த்தான் குழலியை..
அவனருகேயே அமர்ந்து கொண்டு
அனைத்தையும் கவனித்தாள்
அஞ்ஞானத்தோடு....

பணத்தைக் கொடுத்து
ஏமாற்றம் வாங்கினான்..

குழலி மென்மையானவள்
மருத்துவச்சிகளின் ஆரோக்கிய குணம்
அழகிய விழிகளும்
சோடா குண்டுகள் போல விழிகளும்
நடுப்புற ரோஜா போல நுதல்களும்
பெற்ற பேரழகி....
அவள் க்ஷணநேரம் யோசித்தாள்...
துன்பம் என்று மற்றவர்களுக்கு
கொடுப்பதை என்றாவது யோசித்திருப்போமா?
என்று கலங்கினாள்..
ஒரு முடிவும் எடுத்தாள்.....

Comments