பகுதி 3

(இனி பொதுப்படையாக கவிதை செல்லும்...)

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அவள் இதழ் எழுப்பிய சத்தத்தில்
கோலா தவறி சிதறியது..
குழலி கத்தினாள்...
கதிரவனை திருடன் என்று நினைத்தாள்.
அவனோ இல்லை என்று தப்பித்தான்..
சிறு சங்கடம்தான்..

அவன் சொன்னான்.....
இனிமையான
இந்த
இல்லம் என்னுடையது என்று..

அவள்
அதைத் திருப்பி ஒப்பித்தாள்.
இந்த கட்டில்கள், ஜன்னல் வளைவுகள்
சரிகைகள், அலங்கார விளக்குகள்
பூந்தொட்டிகள், பூஜை அறைப் பூக்கள்
இன்னும் இன்னும்.....
என்னுடையது என்றாள்...
உடனே வீட்டை விட்டு வெளியேறு
என்றாள்...
ஆவேசமாய்

கதிரவன் அவளைப்
பைத்தியக்காரி என்று நினைத்தான்...

மெல்ல சமையல் அறை நோக்கி
ஆவேசமாய், நுழைந்தாள்...................

கூட சென்றான் கதிரவன்.
அங்கே அவள் இல்லை...

கனவாக இருக்குமோ?
சில சமயங்கள் நம் எண்ணங்களின்
ஓட்டத்தினால் பாதை சறுக்கி
இம்மாதிரி நிகழ்வதுண்டு..
மனம் ஒரு மாயம்.
அதன் வேலைகள் சில சமயம்
தோற்றுவிக்கும் பல காயம்..
இது அம்மாதிரிதானா?
விடு..........

குளியலறையில்
ஷவரின் மழைத் தூறலில்
ஒடுங்கிப் போயிருந்த
தலை முடிகளை சீவிவிட்டு,
பஞ்சு போன்ற துண்டை எடுத்து
முகத்தை ஒற்றி வைத்து
மெல்ல கண்ணாடியை நோக்கி
நின்றவனுக்குப் பின்னே..........
அவள்.....
சொல்கிறாள்

"உன்னை வெளியேறச் சொன்னேனே?"

அவன் கண்ணாடியைத் துடைத்துவிட்டு
திரும்பவும் பார்த்தான்...
எல்லாம் மாயை./.....

அன்றிரவு சில முடிவுகளாய்
மனதை ஒரு அலையாய் இல்லாமல்
ஒருமுகப் படுத்தினான்...
வீட்டிற்குச் சென்று
அவள் இருக்கிறாளா என்று பார்த்தான்.
இல்லை..
சமயலறையில்
இல்லை
குளியலறையில்
இல்லை......
நிம்மதி.

Comments