பகுதி 2

கவிதைநாயகன் கதிரவன் வாயிலாக.....

என் அம்மாவை அழைத்துக்கொண்டு
புதிதாக தங்கப் போகும்
வீட்டைப் பார்வையிட
சென்றேன்.
நம் உள்ளம் அழகென்றால்
வீடும் அழகாகவே அமையுமல்லவா?
பூவின் அழகு முள்ளிலே இருக்கிறது.
முற்கள் என்றும் அழகானவை.
இல்லம் எனக்கு
இஷ்டமில்லை..
இல்லாத வசதிகள் ஏராளம்..

காற்று இன்றி நாமேது ?
மென் காற்றின் சுகம் அறியாத
மனிதனும் இருக்கிறான உலகில்?
எதிர் அபார்ட்மெண்ட்டில்
ஒரு அழகிய வீடு இருப்பதாக
ஒரு காகிதம் சொல்லியது
காற்றின் உதவியால்
நன்றி காற்றே!
உன்னால் எனக்கு ஆகப் போகும்
மாற்றம் என்னே!!

காகிதத்தின் செய்தியறிந்து
அடுத்த வீட்டை வாடகைக்கு
எடுக்கச் சென்றேன்.

முகப்பிலே தொங்கும் ஆனை
முகனின் தோற்றம்
முகம் மலர்ந்து வரவேற்றது...
இது போதுமே ஒரு உதாரணம்
இடது மூலையில் சோபா!
வலது மூலையில் வெற்றிடம்
அனேகமாய் தொல்லைக் காட்சி
வைப்பதாக இருக்கலாம்.
மத்திய தரையில் கோலங்கள்..
மேலே சிற்பியும் சொக்கும் வர்ணங்கள்
அங்கங்கே அடுக்கப் பட்ட பூந்தொட்டிகள்
சற்று தள்ளி குளியலறை..
அழகூட்டப்பட்ட சன்னல் அறைகள்
இத்யாதி இத்யாதி
மேலே மாடி.....

மாடி என்றாலே
கவிஞர்களுக்கு குஷிதான்.
வானம் இன்றி கவிதைகள் பிறக்குமா?
மிகச் சுத்தமாக டைல்ஸ் பொதிக்கப்பட்ட
மேல்மாடியின் இடது மூலையில்
வானுயர்ந்த கட்டிடங்களும்
நேர் எதிரே அமைதியான கடலும்
மனம் குன்றிய மனிதர்களையும்
நேர் செய்திடும் தோற்றங்கள்.
இயற்கையின் படைப்புகளுக்கு
ஈடாக செய்திட்ட கட்டிடங்களும்
வானும் கடலும்
காற்றின் மெல்லிய கீதங்களும்.....

அட! இந்த வீட்டை விட வேறென்ன வேண்டும்?

அதீத சுகத்தில் ஆட்கொண்ட
நான், சோபாவில் சுகமாய் அமர்ந்து
எதிரே தொல்லைக் காட்சியைக்
காணுகையில்
மனம் கோக் குடிக்கச் சொல்லுகிறது..
தனிமையான வாழ்க்கைதான்
இனிமையான இல்லத்தில்//
குளிரூட்டும் பொட்டியில்
அடுக்கி வைக்கப்பட்ட
கோக்குகளில் ஒன்றை
எடுத்து திறந்தவாறே மெல்ல நிமிர்ந்தேன்...
அங்கே......... அவள்...........

Comments