பகுதி 1

கவிதைநாயகன் கதிரவன்
கவிதைநாயகி பூங்குழலி....

கற்பனைக்கு எட்டாத சில
கவிதைகளில் புனைவதுண்டு.....
இக்கவிதையும் கற்பனைக்கு எட்டாத
ஒரு நிஜமாம்.....
முதலில் பாத்திர அறிமுகங்கள்......

கவிதைநாயகி பூங்குழலியின் வாயிலாக......

மேகக்கூட்டங்களின் ஊடான இடைவெளியில்
மெல்ல பறந்து கொண்டு
தரை இறங்குகிறேன்.
செந்நிறப் புழுதிகளுக்கிடையில்
வர்ணப் பூக்களின் சகதியில்
மெல்ல கண்ணயர்ந்து
உணர்வுகள் கசங்கிய நிலையில்
மெளனியாக பயணம் செய்கிறேன்
என் தோழியின் கை பட்டு
கனவு கலைக்கப் பட்டு எழுந்தேன்
ஒரு மருத்துவமனைப் பூங்காவில்

நிமிட நேரச் சிமிட்டல்கள்
பறவையின் சிறகுகளுக்கும்
தாளாத வாறு பறக்க,
நித்திய கனவைக் கலைத்துவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது விழிகள்.

என் வீடு
என் உலகம்
என் வாழ்க்கை
எல்லாமே இந்த மருத்துவமனைதான்.
தேன்மொழி இனிய நண்பி
குறிப்புகளில் தவறு நேர்ந்தால்
குட்டும் தோழி..

என் மருத்துவமனை வேலைகளில்
குறிப்பானது கவனித்துக்கொள்ளல்.
அனைவரையும் ஆதர்சனத்தோடு
அன்பாக விளாச வேண்டும்
மனம் இழந்த விலங்குகளுக்கிடையில்
மனம் குன்றிய மனிதர்களின்
உலாவலை செவ்வனே சரி செய்வது
என் தலையாய பணி.

மருத்துவமனை யிலொருவன் சொன்னான்
நீ உயரப் போகிறவள்;
நீ சிறந்தவள்;
உன் கைகள் கடவுளின் கரங்கள்;
உன் வியர்வைகள் இரத்தம்;
உன் உணர்ச்சிகள் அன்புக் கடல்" என்று
எனக்கு உச்சி குளிர்ந்தது.

கண்களின் மிரட்டலில் சொக்கிப்போய்
முன்னம் கண்ட நித்திய கனவில் மூழ்கினேன்
வாழ்விலே நான் நினைத்த படிகள்
கரைசேரும் என் ஓடங்கள்
விளக்கொளியாய் என் மருத்துவக் கறைகள்.
நினைத்துப் பார்க்கவே
நெஞ்சில் ஊறுது சர்க்கரைத் துளிகள்.

கறையில்லாத பற்களில் நகைத்துக்கொண்டே
நகர்ந்து சென்று என் தோழி தேன்மொழியிடம்
சொன்னேன் என் பணி மாற்றத்தை..

மெல்ல சிரித்துக்கொண்டிருக்கும்
இதயத்தோடு பயணம் செய்கிறேன்.
என் உள்ளத்துச் சிரிப்புகளில்
ஊறிப்போகிறது ரத்தமுற்ற இதயம்.
அக்கா மலர்விழியை அழைத்தேன்
என் ஆறாம் விரலாகிய கைப்பேசியிலிருந்து.
என் உள்ளக் குமுறலைச் சொல்லி சிரித்தேன்
அக்கா குழந்தைகள்
அக்காவின் கணவன்.
எல்லாரிடமும் இன்பம் பகிர்ந்தேன்.

என் உறவுகளின் சந்தோசத்தில்
இன்றே இறந்துவிடலாமோ?

கண்கள் மெல்ல கார் கண்ணாடியில்
பயணிக்க,
அங்கே எனக்கெதிரே எமனாய்
ஒரு நீளமான வாகனம்..................

Comments