உறக்கமில்லாத கனவுகளுடன்
மேக வண்ணத்தில் அலைகிறேன்
நிமிர்ந்து சற்றே இமை திற
உனக்காக ஒரு விழி
மூடாமல் காத்திருக்கிறது..


கண்களின் குருட்டுத்தன்மை
காதலில் தெரிகிறது
பார்வையின் குருட்டுத்தன்மை
காமத்தில் தெரிகிறது..

இருவரிகளாய்
இவ் விருள் நீளுமென
இங்கே நினைத்தேனே!
இனியவளாய்க் கெடுத்தாய்
இருள் போச்சுதுடி!!!

Comments