மழை

எப்பொழுதாவது
கதவுகள் திறக்குமென
காத்திருக்கும் விழிகள்

பொக்கை வாய் கிழவன்
பிறந்த நாட்டிலே
பொக்ரான் குண்டு

கையில் பிடித்தேன்
இறைவனின் சிறுநீர்
அழும் குழந்தை

மங்கையர் யாவரும்
ஓவியர்தாம்
வாசற்படி கோலம்

தயவு செய்து
வானத்தைப் பார்
உனக்காக நான்
தேய்ந்து கொண்டிருக்கிறேன்

Comments